New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/04/ayjnR3Sey4yudiaEBVxO.jpg)
தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், இவரது குரலுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பாடகி இந்திய சினிமாவின் இசை அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்திய சினிமாவில் தனது இனிமையான குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்து, பல மொழிகளில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள பிரபல பாடலி ஸ்ரேயா கோஷலின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது மெல்லிசைக் குரலால் உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களின் இதயங்களை வென்ற பாடகி ஸ்ரேயா கோஷல். மொழி பேதமின்றி அனைவராலும் விரும்பப்படும் பாடகியாக வலம் வரும் இவர், எல்லைகள் இல்லாமல் இசை உலகில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ஒரு வகையில், பாடுவதற்காகவே பிறந்தவர் என்று வர்ணிக்கக்கூடிய ஒரு பாடகியாக இருக்கும், ஸ்ரேயா இன்றைய இசை உலகிற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்.
ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவின் இசைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஸ்ரேயாவின் குழந்தைப் பருவ புகைப்படம் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தில், சிறுமி ஸ்ரேயா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 2002-ம் ஆண்டு வெளியான வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஆல்பம் படத்தில் இடம் பெற்ற, செல்லமே செல்லம் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில், பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல்.
சமீபத்தில் வெளியாக விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் ஒரு பாடல் பாடியிருந்த ஸ்ரேயா கோஷல், தமிழ், மலையாளம், இந்தி பெங்காலி மொழிகள் மட்டுமல்லாமல், உருது, அசாமி, போஜ்புரி, கன்னடம், ஒடியா, பஞ்சாபி, மராத்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட சுமார் பன்னிரண்டு மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். நான்கு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை ஸ்ரேயா வென்றுள்ளார்.
ஷ்ரேயா மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத்தில் பிறந்தாலும், ராஜஸ்தானின் கோட்டாவிற்கு அருகிலுள்ள ராவத்பட்டா என்ற சிறிய நகரத்தில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். நான்கு வயதில் இசை கற்கத் தொடங்கிய ஷ்ரேயா கோஷலை, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பாலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தினார். 16 வயதில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றபோது ஷ்ரேயா பன்சாலியின் கவனத்திற்கு வந்தார். 'தேவ்தாஸ்' (2002) படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ஸ்ரேயா.
ஸ்ரேயாவின் வாழ்க்கைத் துணைவர் ஷைலாதித்ய முகோபாத்யாய். அவர்கள் பிப்ரவரி 5, 2015 அன்று திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயா மே 2021 இல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஸ்ரேயாவும் ஷைலாதித்யாவும் அந்தக் குழந்தைக்கு தேவ்யன் முகோபாத்யாய் என்று பெயரிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.