/tamil-ie/media/media_files/uploads/2023/06/Maamanannan.webp)
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது.
இதனிடையில், ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இப்படத்துக்கு தடை இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
கடந்த 2018-ம் ஆண்டு 'ஏஞ்சல்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமளித்த உதயநிதி ஸ்டாலின், அந்த திரைப்படத்தில் முழுவதுமாக நடித்துக் கொடுப்பதற்குள், 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிக்க சென்றதாகவும், அதுவே அவரது கடைசி படம் என்றும் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓஎஸ்டி படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்ததால், மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் மாமன்னன் படத்தை தடை செய்யக்கோரியும் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 28-க்குள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தற்போது, மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.