Harish Kalyan's Ispade Rajavum Idhaya Raniyum Review : ஹரிஷ் கல்யான் மற்றும் சில்பா மஞ்சுநாத் இணைந்து நடித்திருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் காதல் கதை எப்படி?
ரஞ்சித் ஜெயக்கொடியின் கதை, திரைக்கதை , வசனம் மற்றும் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மா.கா.பா ஆனந்த், பால சரவணன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
Ispade Rajavum Idhaya Raniyum Review : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்
எதற்கெடுத்தாலும் கோவம், சண்டை என சுற்றுபவர் ஹரிஷ் கல்யாண். சிறிய வயதில் இருக்கும்போதே இவருடைய தாய், வேறொருவருடன் வாழ சென்றுவிடுகிறார். இதனால் மனமுடைந்த ஹரிஷ் கல்யாண் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதையே தன்னுடைய குணமாக வைத்து கொண்டிருக்கிறார்.
பின்னர் இவருக்கும் நாயகியான ஷில்பாவிற்கும் இடையே காதல் மலர்கிறது. தன்னனுடைய அம்மாவை போல காதலியும் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற எண்ணத்திலேயே ஹரிஷ் கல்யாண் எதற்கெடுத்தாலும் கோபத்தை காட்டிகிறார்.
முதலில் ஹரிஷின் முரட்டுத்தனத்தை பிடித்து காதலில் விழுந்த ஷில்பா, பின்னர் அதே முரட்டுத்தனத்தின் காரணமாக அவரை விட்டு பிரிந்து செல்கிறார். ஆனால் என்ன நடந்தாலும் தனது காதலியை பிரிந்துவிடக் கூடாது என்று தேடி துரத்துகிறார் ஹரிஷ். இறுதியில் இவர்களில் காதல் என்ன தான் ஆகிறது என்பது தான் கதையே.
இந்த படத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.