/tamil-ie/media/media_files/uploads/2023/07/ethir-neechal-1.jpg)
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடியப் போவதாக தெரிகிறது.
சன் டிவியில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பிப் பார்க்கின்றனர் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக இணையதளத்தில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக சீரியலில் விசாலாட்சியாக நடித்து வரும் சத்யபிரியா விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சத்யபிரியா, " நான் ஆர்டிஓ ஆபீஸில் இருக்கிறேன்; இதற்கு என்ன காரணம் யோசிங்க பார்ப்போம்! " எனக் கூறியுள்ளார்.
மேலும் எதிர்நீச்சல் தொடர் விரைவில் முடிக்க போகிறதா என்ற கேள்விக்கு சோகமான எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர் ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியது. இதற்கு மறைந்த நடிகர் மாரிமுத்து ஒரு காரணம். ஏப்பா ஏ என அவர் பேசும் வசனங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தன.
இந்த நிலையில் அவரின் திடீர் இறப்பு, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. சீரியலில் வந்துள்ள இந்த மாற்றங்களை அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவும் சீரியலின் டிஆர்பி அறிவுக்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.