Advertisment

மகாத்மா காந்தி, அம்பேத்கர் இடையேயான விவாதம் சுவாரஸ்யமாக இருக்கும்: ஜான்வி கபூர்

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று, ஜான்வி கபூர் பேசும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor

Janhvi Kapoor

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜான்வி கபூர் நடித்துள்ள Mr & Mrs மஹி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், தி லாலன்டோப்' உடன் பேசிய ஜான்வி, ”அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே நடக்கும் விவாதத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் எதற்காக நிற்கிறார்கள் மற்றும் எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்களின் பார்வைகள் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருந்தன அல்லது ஒருவருக்கொருவர் எவ்வாறு செல்வாக்கு செலுத்தினார்கள் என்பதற்கான விவாதம். அவர்கள் இருவரும் நம் சமூகத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர், எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான விவாதமாக இருக்கும்.

அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே தனது நிலைப்பாடு என்ன என்பதில் மிகக் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார், ஆனால் நம் சமூகத்தில் நிலவும் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளை மேலும் மேலும் வெளிப்படுத்தியதால் காந்தியின் பார்வை தொடர்ந்து வளர்ந்தது, என்று நான் நினைக்கிறேன்.

மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது மிகவும்  தனித்துவமானது” என்று ஜான்வி அந்த பேட்டியில் கூறினார்.

ஜான்வி பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை என்பதை தாண்டி சமூகத்தைப் பற்றிய அவரது பரந்த புரிதல், ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment