ஆங்கிலத்தில் படிக்க...
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகி 2 வாரங்களை கடந்தாலும் படத்தை பற்றி பேச்சுக்கள் இன்னும் குறையாத நிலையில், படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஆலியா குரோஷி நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதி வெளியான படம் ஜவான். நயன்தாரா விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் தற்போது வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 700 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளது.
ஷாருக்கானின் இரட்டை வேடம், விஜய் சேதுபதியின் மிரட்டலான அவதாரம், குத்துப்பாட்டு போடும் பெண்கள் கும்பல் என தற்போதுவரை ஜவான் படம் பற்றி ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த நடிகர்கள் கூட சக நடிகர்கள் குறித்து பாராட்டு மழை பொழிந்து வரும் நிலையில், படத்தின் இளம் நடிகர்கள் வெற்றியைக் கொண்டாடுவதை நிறுத்தவில்லை.
அந்த வகையில், ஜவான் படத்தில் ஜான்வி கேரக்டரில் நடித்த நடிகை ஆலியா குரேஷி, சக நடிகர்கள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதில் அவர்கள் இரண்டு வருடங்கள் ஒன்றாக வேலை செய்ததால், குழு ஒரு குடும்பம் போல் மாறிவிட்டது என்று கூறியுள்ள அவர், இது பலருடன் எதிரொலிப்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முந்தைய நேர்காணலில் பேசிய ஆலியா குரோஷி, ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றியும், அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து பேசினார். ஜவானில் தீபிகா படுகோனே நடித்திருந்தாலும் அவருடன் இணைந்து நடிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்த அவர். பட வெளியீட்டின்போது அவரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும், நடந்த விருந்தில் கூட அவரைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் ஆலியா கூறினார்.
இதனிடையே தீபிகாவுடன் பணிபுரிய தவறிவிட்டீர்களா என்று கேட்டதற்கு, நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறிய ஆலியா குரோஷி, தீபிகாவுடன் விருந்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிள்ளார். நயன்தாராவைப் பற்றி பேசுகையில், அவர் திரையிலும் வெளியேயும் ஒரு 'சக்திவாய்ந்த' பெண். "அவர் தனது குழந்தைகளை வரவேற்றது போல் ஒரு புதிய பயணத்தை நாங்கள் பார்த்தோம். அவரை சுற்றி இருப்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது என்று அவரை சந்தித்த காலத்திலிருந்து தன்னிடம் எப்படி அன்பாக இருந்தார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக நடிகர் விஜய் சேதுபதியைப் பற்றிப் பேசிய அவர், அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஜவான் படப்பிடிப்பின் போது ஒன்றாக வேலை செய்யவோ, உட்கார்ந்து அரட்டை அடிக்கவோ நேரம் கிடைக்கவில்லை எனவே ஜவான் வெளியீட்டுக்கு பிறகு ஒரு விருந்தில் நான் அவரைச் சந்தித்தேன், அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் பொதுவாக எல்லா மூத்த நடிகர்களிடமும் இளம் நடிகர்களுக்கு சொல்லும் அறிவுரைகளை கேட்பேன். அவரை சந்தித்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தார், அவர் நடிப்பில் எனக்கு முழு மாஸ்டர் கிளாஸ் கொடுத்தார்.
அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், அவர் தனது பணியில் எவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதுதான். அவர் தனது கேரக்டர்களுக்காக மிகவும் நேர்மையானவர். அவர் ஒரு சிறந்த நடிகராக இருந்தாலும், சிறப்பாகச் செய்ய எல்லைகளைத் கடந்து செயல்படுவார். அவர் உண்மையில் ஒரு நடிப்பு பயிற்சியாளராக இருந்தாலும் சில சமயங்களில் காட்சிகளை உயர்த்துவதற்கு மெனக்கிட வேண்டும். ஆனால் அவருக்கு அது தேவையில்லை, அவரிடம் இன்னும் நிறைய பணிவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“