கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்காத காரணம் சிவகுமார் தானா? மருமகள் ஜோதிகா உடைத்த உண்மை!

சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஜோதிகாவின் நடிப்புக் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. அதில் குறிப்பிடத்தக்கது சசிகுமார் ஜோதிகாவை நடிக்க கூடாது என்று கூறியது. இந்நிலையில் இதற்கு ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

சூர்யா - ஜோதிகா திருமணத்திற்கு பிறகு ஜோதிகாவின் நடிப்புக் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. அதில் குறிப்பிடத்தக்கது சசிகுமார் ஜோதிகாவை நடிக்க கூடாது என்று கூறியது. இந்நிலையில் இதற்கு ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
jothika and sivakumar

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சில காலம் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த இடைவெளி குறித்து பல்வேறு செய்திகள் பரவி வந்தன. குறிப்பாக, ஜோதிகாவின் மாமனாரான நடிகர் சிவகுமார் தான், மருமகள் ஜோதிகா நடிப்பதை விரும்பாததால் அவர் திரையுலகை விட்டு விலகினார் என்ற ஒரு செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இந்த வதந்திகள் அனைத்திற்கும் ஜோதிகா அளித்த விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisment

திருமணம் முடிந்ததும் மருமகள் ஜோதிகா நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிவகுமார் தான் வற்புறுத்தினார் என சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஒரு கலைக்குடும்பத்தில் இருக்கும் கலைஞர், மற்றொரு கலைஞரின் விருப்பத்திற்கும் திறமைக்கும் தடை போடுவது போல இந்த செய்தி சித்தரிக்கப்பட்டது. இதுகுறித்து நேரடியாக எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வதந்தி பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. ஆனால், ஜோதிகா தனது மாமனார் சிவகுமார்தான் தான் திருமணம் முடிந்த பிறகு நடிப்பதை நிறுத்தியதற்குக் காரணம் என்ற வதந்திக்கு பிஹைவுட்ஸ் டிவி யூடியூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று அவர் கூறுகிறார். மேலும், தனது குடும்பத்தில் மிகவும் ஆதரவாக இருப்பவர் தனது மாமனார் சிவகுமார்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேலைக்குச் செல்லும் போது வீடு, குழந்தைகள் மற்றும் பொறுப்புகளை மறந்துவிடுமாறு சிவகுமார் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

நடிகர் சிவகுமார் தனது சினிமா வாழ்க்கைக்குத் தடை போடுபவர் அல்ல, மாறாக அவர் தான் தனக்கு வீட்டில் உள்ளவர்களில் மிகப் பெரிய ஆதரவாளர் என்று ஜோதிகா கூறியுள்ளார். “நான் ஷூட்டிங் செல்லும்போதெல்லாம், வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம்; வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள்” என்று அவர் தனக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக ஜோதிகா உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். குடும்பப் பொறுப்புகளை ஒருபுறம் வைத்துவிட்டு, தனது கலை ஆர்வத்திற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்க சிவகுமார் வழிவகுப்பதாக ஜோதிகா கூறினார்.

Jothika Sivakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: