/tamil-ie/media/media_files/uploads/2018/04/jyothika-in-tumhari-sulu-remake.jpg)
வித்யா பாலன் நடித்து 2017-ம் ஆண்டு வெளியான ‘துமாரி சுலு’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்ய உள்ளது. வித்யா பாலன் நடித்த கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு ஹிந்தி திரையுலகில், ’துமாரி சுலு’ திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டியது. இந்தத் திரைப்படத்தில் சுலோச்சனா என்றக் கதாப்பாத்திரத்தில் வித்யா பாலன் நடித்திருப்பார். ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிக்குச் சேரும் ஒரு குடும்பத் தலைவி எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் ஹிந்தி மொழியில் ஹிட் ஆனதை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்த ரீமேக் படத்திற்கு “காற்றின் மொழி” என்று பெயர் சூட்டியுள்ளனர். இயக்குநர் ராதாமோகன் படைப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் சுலோச்சனா என்ற கதாப்பாத்திரத்தை ஜோதிகா நடிக்க உள்ளார். 2007ம் ஆண்டு வெளியான மொழி படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் ராதாமோகன் மற்றும் ஜோதிகா. மொழி படத்தில் இடம்பெறும் ‘காற்றின் மொழி’ பாடலை இப்படத்தின் பெயராக வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து விதார்த் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.