/indian-express-tamil/media/media_files/oE2GVSfHsxukPBfKwD5O.jpg)
தமிழ் சினிமா மட்டுமல்லாது பல்வேறு திரைத்துறை ரசிகர்களுக்கும், சமானிய மக்களுக்கும் பிடித்த நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா- ஜோதிகா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படங்கள் பற்றிய அப்டேட், இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் என எதுவாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வைரலாகும். ரசிகர்கள் கொண்டாடுவர்.
சூர்யா, வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் பிசியாக நடத்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்துள்ள கங்குவா படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கடந்த ஒரு வருடமாக சூர்யாவின் எந்த படமும் வெளியாகவில்லை. கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின்கங்குவா படம் பற்றின அப்டேட் ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்தியது.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் கம்பேக் கொடுத்து தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாது ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடிக்கிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா தங்கள் வீட்டைப் பற்றிய சுவாரஸ்ய விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கார்த்தி, சூர்யா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார்கள். சிவக்குமார் அப்பா ஸ்பீச் கொடுப்பதில் பிஸியாக இருப்பார். எங்க வீட்டில் ஒரு ரூல் இருக்கிறது, மதிய உணவும், இரவு டின்னரும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் அந்த ரூல்.
இதனால் அந்த இரண்டு நேரமும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.