’காற்றின் மொழி’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா, தற்போது பெயரிடப்படாத காமெடிப் படத்தில் நடித்து வருகிறார்.
இதனை ’குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் ஜோ. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில், அரசு பள்ளி ஆசிரியையாக வலம் வரவிருக்கிறார் ஜோ. ‘காக்க காக்க’ படத்திற்குப் பிறகு மீண்டும் டீச்சராக அவரை திரையில் காண ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இதில் பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்திற்கு ‘ராட்சசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டைட்டிலுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியிருக்கிறார்கள் ரசிகர்கள். ஒருவேளை அழகான ராட்சசி என்பதை சுருக்கமாக வைத்திருப்பார்கள் என்ற பேச்சுகளும் ஒருபுறம் எழுந்துள்ளது. இதற்கிடையே டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.