வெளியில இருந்து பாராட்டிக்கலாம், இனிமேல் தேவையில்லை; குருவுடன் முரண்பட்ட கமல்ஹாசன்: கே.பாலச்சந்தர் மகள் ஓபன் டாக்

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்றாலும் இருவருக்கும் சில நேரங்களில் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கும் என பாலச்சந்தர் மகள் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் என்றாலும் இருவருக்கும் சில நேரங்களில் முரண்பட்ட கருத்துக்கள் இருக்கும் என பாலச்சந்தர் மகள் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
K Balachanad

சினிமாவில் கோலோச்சிய ஜாம்பவான்களில் ஒருவரான இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமி அவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மற்றும் தன் தந்தை குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிக்கும் கமலுக்கும் இடையே உள்ள உறவு, பாலசந்தருடன் அவர்கள் கொண்டிருந்த பிணைப்பு குறித்து அவள் விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சுவாரசியமான பல தகவல்களை கூறியுள்ளார். 

Advertisment

ரஜினி, கமல் இணைப்பு: ஒரு சவாலான கனவு

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படம் எடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம் என்று புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார். 'தில்லுமுல்லு' படத்தில் ரஜினி ஒரு சிறிய கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும், அதன் பிறகு அவர்களை இணைத்து ஒரு முழு நீளத் திரைப்படம் எடுப்பதற்குப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும், இருவருமே உச்ச நட்சத்திரங்களாக இருந்ததால், இருவரின் கதாபாத்திரங்களையும் சமமாகப் பிரிப்பதிலும், படத் தயாரிப்புக்கான செலவுகள் அதிகமாகும் என்பதாலும் பாலசந்தர் தயக்கம் காட்டியதாகப் புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

பாலசந்தர் - ரஜினி - கமல் உறவு: ஒரு மரியாதை நிறைந்த பிணைப்பு

கே. பாலசந்தர் உடனான ரஜினியின் உறவு, ஒரு சீடன் தன் குருவிடம் காட்டும் பக்தி போன்றது. ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகும், தன் குருவான பாலசந்தரிடம் அவர் காட்டிய மரியாதை கடைசி வரை குறையவில்லை என்று புஷ்பா கூறுகிறார்.

ஆனால், கமல்ஹாசனுக்கும் பாலசந்தருக்கும் இடையே இருந்த உறவு வேறு மாதிரியானது. அது ஒரு நட்புடனும், மரியாதையுடனும், பரஸ்பர சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக இருந்ததாகப் புஷ்பா விவரித்துள்ளார். இந்தப் பிணைப்பு காரணமாகவே, கமல் ஒரு கட்டத்தில் பாலசந்தரின் சில கருத்துக்களுடன் முரண்பட்டு, தனது சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து, 'ராஜா பார்வையில்' என ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்தார். இது ஒரு குரு - சிஷ்யன் உறவுத் தாண்டி, இருவரின் தனிப்பட்ட கலைப் பயணங்களில் ஏற்பட்ட புரிதல்களைக் காட்டுகிறது.

கவிதாலயா தயாரிப்புகள்: கவிதாலயா நிறுவனம் தயாரித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் 'அண்ணாமலை' மற்றும் 'முத்து' என்று புஷ்பா கந்தசாமி தெரிவித்துள்ளார். அதேபோல், 'அண்ணாமலை', 'முத்து' மற்றும் 'ரோஜா' போன்ற திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'ரோஜா' திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டபோதிலும், இந்திய அளவில் ஒரு பெரிய அரசியல் கருத்தைப் பேசியது என்றும் கூறினார்.

Kamalhaasan k Balachandar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: