/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-1.jpg)
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்தார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தி வெளியிட்ட அவர், ''வரும் 30 ஆம் தேதி, மும்பையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கவுதம் கிச்லுவுடன் திருமணம் நடக்கவுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பெருந்தொற்றுக் காலம், எங்களின் சந்தோஷம் குறித்த உண்மையான புரிதலை கற்றுக் கொடுத்தது. இருப்பினும், எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்க இருக்கிறோம் என்று எண்ணும் போது வியப்பாக உள்ளது. எங்களை நினைத்து நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
இத்தனை ஆண்டுகள் என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பயணத்தைத் தொடங்கும் எங்களுக்கு, உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் தேவை. என்னுடைய ரசிகர்களை தொடர்ந்து நான் மகிழ்விப்பேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி'' என்று காஜல் அகர்வால் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.