பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டு சென்றாயன் வெளியேற்றப்பட்டார். எதிர்பாராத இந்த முடிவால் கோவப்பட்ட கமல், அதிரடி முடிவெடுத்தார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நேர்ந்த அநீதிக்கு எதிராக குறல் கொடுத்த கமல்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில், 12 வாரங்களுக்கு மேல் கடந்த நிலையில், இந்த வாரம் எவிக்ஷனில் ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவருடன் இணைந்து மற்ற போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில், சென்றாயன் சிவப்பு நிறம் சாயம் தலை முடியில் அடித்துக்கொண்டால் அவர் சேவ் ஆவார் என்று பொய் கூறி காரியத்தை சாதித்தார் ஐஸ்வர்யா. ஆனால் சென்றாயன் அதை செய்தால் சேவ் ஆவது ஐஸ்வர்யா என்பது தான் உண்மை.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே ஐஸ்வர்யாவிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது. வாரங்கள் கடந்து செல்ல, ஐஸ்வர்யா மீதான எதிர்ப்பு அதிகமாகியிருந்தது. இந்நிலையில் இந்த வாரம் நிச்சயம் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தபோது, அதிர்ச்சியூட்டும் வகையில் சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.
ஊரே ஐஸ்வர்யா வெளியே செல்ல வேண்டும் என்று வாக்களித்தால், பிக் பாஸ் அவர் ஸ்டைலில் ஒரு நாடகத்தை நிகழ்ச்சி வழக்கம்போல ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிட்டார். இதில் பலி ஆடு அப்பாவி சென்றாயன் தான். மக்கள் அனைவரும் அவரே போட்டியில் வெற்றிப்பெற வேண்டும் என்று வாக்களித்த நிலையில் பாதியிலேயே அவரை வெளியே அனுப்பிவிட்டது இந்த நிகழ்ச்சி.
சென்றாயனுக்கு நடந்த அநீதியால் பொதுமக்கள் மட்டுமின்றி கமல் ஹாசனும் கோவமடைந்திருந்தார். என்னை எவிக்ட் செய்ய சொல்லியிருந்தால் ஐஸ்வர்யாவிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியிருப்பேன் என்றும் கூரினார். மேலும் சென்றாயன் எவிக்ஷன் தான் விரும்பாத ஒன்று என்றும் கமல் கூறினார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் முடிவில் எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பது போல எனக்கும் இருக்கிறது. அதனால் என் வாக்கையும் பிக் பாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த வாரத்தின் எவிக்ஷனில் மற்றொரு சதி நடக்காமல் இருக்க ரித்விகா காப்பாற்றப்பட வேண்டும். ஐஸ்வர்யா நேரடி நாமினேஷனுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இத்தனை வாரங்களில் நேற்று முதன் முரையாக ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் மும்தாஜ் கண்டித்து பேசியதற்காகவும், சென்றாயன் வெளியேறிய பிறகும் நீதி கிடைக்க ஒரு தீர்வை கூறிய கமல் ஹாசனுக்கு பாராட்டுகள் குவிந்தது.