Advertisment

ஜோதிகாவுடன் ஒப்பீடு... நான் தான் ஒரிஜினல் சந்திரமுகி : கங்கனா ரனாவத்

முன்னணி நடிகர்களான கங்கனா ரனாவத் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் முதல் பாகத்தில் இருந்து எந்த வகையில் வேறுபட்டது என்று கூறியுள்ளனர்

author-image
WebDesk
New Update
Chandramukhi 2

சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 28 அன்று திரைக்கு வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க....

Advertisment

பி.வாசு இயக்கத்தில் தயாராகியுள்ள சந்திரமுகி 2 திரைபபடம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில்,  நான்தான் ஒரிஜினல் சந்திரமுகி என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஜோதிகா, நயன்தரா பிரபு, வினித், வடிவேலு நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பி.வாசு இயக்கததில் வெளியான படம் சந்திரமுகி. கன்னட சினிமாவின் ஆப்த மித்ரா படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த படம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெயரை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தாயராகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பி.வாசு இயக்கியுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 28-ந் தேதி வெளியாக உள்ள சந்திரமுகி 2 படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழு படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

சந்திரமுகி முதல் பாகத்தில் சந்திரமுகி பேயால் பாதிக்கப்பட்ட கங்கா கேரக்டரில் ஜோதிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில, தமிழ் சினிமாவில் ஜோதிகா சந்திரமுகியாக அடையாளம் பெற்றிருந்தார். இதனிடையே தற்போது தயாராகியுள்ள 2-ம் பாகத்தில் சந்திரமுகியாக நடித்துள்ள நடிகை கங்கான ரனாவத் நான் தான் ஒரிஜினல் சந்திரமுகி என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சந்திரமுகி 2 படம் சந்திரமுகியின் கதையை தானே சொல்லும் என்பதால் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. படத்தில் பேய் பிடிக்கும் கதாபாத்திரம் அல்லாமல், டைட்டில் ரோலில் தான் நடித்தது பெருமிதமாக உள்ளது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில்,கங்கனா மற்றும் சந்திரமுகி 2 பற்றி பேசிய ராகவா  கூறுகையில்,

சந்திரமுகி படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று நான் யோசித்தபோது, ​​கங்கனா மேம் அதை செய்வார் என்று உறுதியாகிவிட்டது. தேசிய விருது பெற்ற அவரின் ரசிகராக, தூரத்தில் இருந்து அவரை ரசித்து வருபவர் என்பதால், அவருடன் திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றாக இருந்தது. ரஜினிகாந்த் சாரின் படத்தின் தொடர்ச்சி, அதுவும் இயக்குநர் பி.வாசு சாருடன் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்தப் படத்தில் நடித்ததற்காக எனக்கு சூப்பர் ஸ்டாரின் ஆசிர்வாதம் கிடைத்தது என கூறியுள்ளார்.

இதற்கிடையில், “தாம் தூம் மற்றும் தலைவிக்குப் பிறகு சந்திரமுகி 2  படம் மூலம் தமிழ் சினிமாவுக்குத் திரும்புவதில் உற்றசாகமாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் இது எனது மூன்றாவது படம். 3 படமும் நன்றாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக, சந்திரமுகி 2, கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட கலர்ஃபுல் படத்தை நான் செய்யவில்லை. படப்பிடிப்பில் என்னை மிகவும் வசதியாக ஆக்கிய ராகவா லாரன்ஸ் சாருடன் பணிபுரிவது எனது கேரியரில் ஒரு உயர்ந்த தருணம்,” என்று கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் ஒரு இயக்குனர். மேலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான காஞ்சனா தொடரை உருவாக்கியுள்ளார். சந்திரமுகி 2 படத்தை தயாரிக்கும் போது பி.வாசுவிடம் நீங்கள் இன்புட்ஸ் கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு பதில் அளித்த லாரன்ஸ், “இவ்வளவு பெரிய இயக்குனரிடம் நான் எப்படி சொல்ல முடியும்? அவர் என்னிடம் என்ன கேட்டாலும் அதை செய்வதற்கு நான் தயாராக இருந்தேன். காமெடி காட்சிகள் என்று வரும்போது மட்டும் சில ஆலோசனைகளை சொன்னேன்.

மேலும், “நான் திரைப்படங்களை இயக்கும் போது, எனது ஸ்கிரிப்ட் மற்றும் யோசனைகளில் யாராவது தலையிட்டால் நான் அதை விரும்ப மாட்டேன். அதேபோல், நான் வேறொருவரின் யோசனையில் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளர்.

இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து சந்திரமுகி 2 வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ள கங்கனா ரணாவத் '' ஜோதிகா மேம் நடித்த சந்திரமுகிக்கு நானே ரசிகை. ஆனால், முன்பைப் போல் இல்லாமல் இந்தப் படத்தில் நிஜ சந்திரமுகியாக நடிக்கிறேன். நான் சந்திரமுகியால் ஆட்கொள்ளப்பட்டவள் அல்ல. அதுதான் வித்தியாசம். சந்திரமுகி ஏன் முதலில் பேயாக மாறினாள் என்பதை என் கதாபாத்திரம் வெளிப்படுத்தும். ஜோதிகா மேம் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட கேரக்டர் லட்சுமி மேனன். படத்தில் நான் ஒரிஜினல் சந்திரமுகியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..

ராகவா லாரன்ஸ் மேலும் கூறுகையில், “ஜோதிகா மேடம் தான் சந்திரமுகி என்று கருதி சந்திரமுகி என்ன செய்வார் என்று நினைக்கிறாரோ அதை செய்ய வேண்டும். ஆனால் இவர் ஒரிஜினல். கங்கனா உண்மையான சந்திரமுகியாக நடிக்கிறார். எனவே, இரண்டு படங்களையும் ஒப்பிடுவது நியாயமாக இருக்காது. உதாரணமாக, எனது காஞ்சனா படத்தில், சரத்குமாரின் பேய் என் உடம்பில் படும்போது, நான் வேறு மாதிரி ஆகிவிடுவேன். இருப்பினும், சரத்குமாரின் தனிப்பட்ட குணம் மென்மையானது. அதுதான் வித்தியாசம்."

சந்திரமுகி ரிலீஸுக்கு முன், போஸ்டர்கள் மற்றும் ப்ரோமோக்கள் சூப்பர் ஸ்டார் படம் போல் இல்லாததால், தலைவர் ஏன் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டார் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். படத்தின் முதல் பாதியில் கூட தலைவர் சிறிது நேரம் மறைந்து விடுகிறார். ஆனால் வேட்டையனின் பிரவேசத்திற்குப் அவர் மறுத்ததால் அவருடைய கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று வாசு சார் சொன்னதும், கொஞ்சம் தயங்கினேன்.

நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, அவரின் குணாதிசயம் எதுவும் காட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது. எனக்கு தலைவரின் செல்வாக்கு இருக்கிறது. இப்போது வேட்டையனுக்கு மேக்கப் போட வேண்டியிருக்கும் போது, என்னுடைய கதாபாத்திரத்தை நான் செய்ய வேண்டும் என்று வாசு சார் குறிப்பிட்டார். அதனால், சில சமயங்களில்,  என்னையும் மீறி தலைவர் மேனரிசங்கள் வந்துவிடுகிறது என்று என்னிடம் சொல்வார். அதன்பிறகு அந்த காட்சியை நான் மீண்டும் செய்ய வேண்டிய நிலை வரும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kangana Ranaut Raghava Lawrance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment