Advertisment

அஜித் கூட நடிக்க அப்பவே கிடைத்த வாய்ப்பு; மறுத்த காரணத்தை கூறும் சிவராஜ் குமார்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சிறப்பு தோற்றத்தில் தமிழ் திரையுலகில் கம்பீரமாக என்ட்ரி கொடுத்தார்.

author-image
WebDesk
New Update
Sivarajkumar Ajith Kumar

அஜித் குமார் - சிவராஜ்குமார்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிவ ராஜ்குமார், தற்போது மற்ற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சாண்டல்வுட் துறையில் மிகவும் மதிக்கப்படும் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவராஜ்குமார், சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தமிழ் திரையுலகில் கம்பீரமாக என்ட்ரி கொடுத்தார்.

Advertisment

ஜெயிலர் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அறிமுகத்தை கொடுத்த நிலையில், தற்போது அவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கன்னடத் திரையுலகின் சிவண்ணா, என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவராஜ்குமார், ஜெயிலர் மூலம் கோலிவுட் சினிமாவில் என்டரி ஆவதற்கு முன்பே, பிரபல தமிழ் நடிகரான அஜித் குமாருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தாக சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் கலாட்டா பிளஸ் உடன் பேசிய, சிவராஜ்குமார் தன்னை தமிழ் திரைப்படங்களுக்காக 7-8 ஆண்டுகளுக்கு முன்பு அணுகியதாக தெரிவித்துள்ளார். அஜித் குமார் நடிக்கும் படத்திற்காக தன்னை அணுகியதாக கூறிய அவர், அது எந்த படம் என்று தனக்கு இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார். இருப்பினும், தனது பிஸியான கால்ஷீட் மற்றும் வேறு சில காரணங்களால் இந்த வாய்ப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் நான் வேறு மொழிப் படத்திற்கு தேதி கொடுத்திருந்தால் தனக்கு நெறிமுறைகள் இல்லை என்று தனது கன்னட சினிமா சகாக்கள் நினைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள சிவராஜ்குமார், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்ததால் தமிழ் மொழியை எப்போதும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கன்னட நட்சத்திரம் தனது தந்தை, புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார், தயாரிப்பாளர்களை 'அன்னதாலு' (நமக்கு உணவளிப்பவர்கள்) என்று எப்போதும் தன்னிடம் சொல்வார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான திறமையான ஹீரோக்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். கோலிவுட் துறையில் இறங்கினால், அது உண்மையிலேயே தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நரசிம்மாவாக வந்து மாஸ் செய்த சிவராஜ்குமார் அடுத்து தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். பீரியட் ஆக்‌ஷன் டிராமாவான இந்த படத்தில் இதுவரை பார்த்திராத கேரக்டரில் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment