Advertisment

கண்ணதாசன் மனதில் உள்ள அந்த முதல் காதலி: 'பாலும் பழமும்' திரைப்படத்தில் இந்த பாடலை கேட்டுருக்கீங்களா?

சின்ன வயதில் ஆண்களுக்கு ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை அவர்களால் மறக்க முடியாது. அந்த பெண்ணின் முகம் அவர்களுக்கு நினைவு இருக்கும். இதுபோல கவிஞர் கண்ணதாசனுக்கு சிறுவயதில் முதல் காதல் இருந்தது.

author-image
WebDesk
New Update
கண்ணதாசன்

சின்ன வயதில் ஆண்களுக்கு ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை அவர்களால் மறக்க முடியாது. அந்த பெண்ணின் முகம் அவர்களுக்கு நினைவு இருக்கும். இதுபோல கவிஞர் கண்ணதாசனுக்கு சிறுவயதில் முதல் காதல் இருந்தது. ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. சிவாஜி கணேஷன் நடித்த பாலும் பழமும் திரைப்படத்தில், முதல் காதலி தொடர்பாக பாடல் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவரின், முதல் காதல் அனுபவத்தை அவர் எழுதியிருப்பார். இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் இந்த பாடலை பார்த்து வியந்து கண்ணதாசனை பாராட்டி உள்ளார்.

Advertisment

காதல் ஏற்பட்டால் கவிதை பிறக்கும் என்றும் காதல் தோல்வியில்தான் கவிஞர் பிறப்பார்கள் என்று சொல்வார்கள். காதல் என்றால் என்ன என்று தெரியாமல் வரும் முதல் காதலுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. கவிஞர் பாரதிக்கு முதல் காதல் ஏற்படும்போது வயது 10. இந்நிலையில் உடல் இன்பம் என்பது என்ன என்று தெரிவதற்கு முன்னால் ஏற்படும் காதல் உயர்வானது என்று பாரதி கூறியதாகக் கூறப்படுகிறது.

 இதை இப்படிச் சொல்லாமல் கவிஞர் கண்ணதாசன் இன்னும் பக்குவமாக கூறியுள்ளார். என்னை பார்த்து வெட்கப்படாத வயதில் அவர் வெட்கப்பட்டாள் என்று கூறுவார். நானும் பழகத் தெரியாத வயதில், பழகத் தொடங்கினேன். பொதுவாக முதல் காதலில் யாரும் அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். தொட்டு கூட பேச மாட்டார்கள். வெறும் பார்வையில் தொடங்கி பார்வையில் முடிந்துவிடும். கப்பல் கழிந்தால் கூட, சோகம் ஏற்படாது. ஆனால் முதல் காதல் தோல்வியில் எல்லா சோகௌம் ஏற்படும். முதல் காதல் தோல்விக்கு பிறகு கண்ணதாசனின் கனவில்தான் அந்த காதலி தோன்றுவாள். நினைவில் அதற்கு பிறகு பல காதல்கள் இருந்தாலும், முதல் காதலி போன்று வரவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த கனவில் இருக்கும் காதலியால் ஏற்படும் காதல் கற்பனையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வாசகர் ஒருவர் “ உங்களை கவிஞர் ஆக்கிய சந்தர்ப்பம் எது ?” என்று கேட்டபோது, கண்ணதாசன் அதற்கு முதல் காதல் தோல்வி என்று தெரிவித்துள்ளார். கவிஞர் கண்ணாதாசன் தமிழ் சினிமாவில் நன்றாக செயல்பட்டு வந்த காலத்தில் அவர் முதல் காதலியை மீண்டும் சந்திக்கிறார்.

தற்போது அவர் வேறு ஒருவரின் மனைவியாக உள்ளார். இந்நிலையில் முதல் காதலியை பார்த்ததால் பழைய சோகம் மீண்டும் அவரிடம் வந்துள்ளது. இந்நிலையில் ’பாலும் பழமும்’ படத்தின் கதையோடு, பீம்சிங் மற்றும் சிவாஜி கண்ணதாசனை சந்திக்கின்றனர். இந்த படத்தில் சிவாஜி அனாதையாக இருப்பார், அவரை ஒர் குடும்பம் தத்தெடுத்து மருத்துவம் வரை படிக்க வைப்பார்கள். இந்நிலையில் அவருக்கு சௌகார் ஜானகியை திருமணம் செய்து வைக்க வீட்டில் ஆசைப்படுவார்கள். ஆனால் சரோஜா தேவியுடன் இவருக்கு காதல் இருப்பதால், வீட்டில் அவரையே திருமணம் செய்து வைப்பார்கள்.

ஆனால் சரோஜா தேவி உடல் நிலை சரியில்லாததால், அவரை பார்த்துகொள்வதில், சிவாஜி கவனம் செலுத்துவார். இப்படி தொடர்ந்தால், சிவாஜியின் லட்சியம் அழிந்துவிடும் என்று நினைத்த சரோஜா தேவி வீட்டை விட்டுச் சென்றுவிடுவார். இதைத்தொடர்ந்து சிவாஜிக்கு சௌகார் ஜானகியை திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால் அவரால் முதல் மனைவியை மறக்க முடியாது. மேலும் சிவாஜி கண்களை இழந்துவிடுவார். இந்நிலையில் சரோஜா தேவி, யாருக்கும் தெரியாமல், உதவி செய்யும் பெண் போல் , சிவாஜியை பார்த்துகொள்வார். அப்போது சிவாஜியிடம் முதல் மனைவியை மறந்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்று கேட்பார். அப்போது முதல் மனைவியை மறக்க முடியாது என்று சொல்லி ஒரு பாடல் பாடுவார்.

இந்நிலையில் இந்த சூழலை கண்ணதாசனிடம் சொன்னபோது, அவரது முதல் காதலியை மனதில் வைத்து எழுதியுள்ளார். இந்த பாடலை பார்த்த சிவாஜீ எப்படி இப்படி எழுதினார் என்று கேட்டபோது. நான் எங்கே எழுதினேன் என்னுள் இருக்கும் எனது முதல் காதலிதான் எழுதினார் என்று கூறுவார்.

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” என்ற பாடல்தான் அது. இந்நிலையில் இந்த பாடலில் முதல் காதலி ( படத்தில் முதல் மனைவி) மனத்தின் கோவிலில் வைத்து வளர்த்ததாகவும். ஆனால் அவர் சென்றுவிட்டாள் என்று கூறியிருப்பார்.

வெறும் முதல் மனைவியின் பிரிவு சோகத்தை எழுதாமல், அவரை மறந்துவிட்டு தற்போது உள்ள மனைவியுடன் வாழ வேண்டும் என்று சரோஜாதேவி சொல்வதும் பாட்டின் வரியில் வரும்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment