/indian-express-tamil/media/media_files/zPVHigKkgvnLK2NudwwC.jpg)
கண்ணதாசன்
கண்ணதாசன் ஒரு பாடலை கேட்டு, அதை பிடித்துப் போன நிலையில், அந்த கவிஞரை திரைத்துறையில் கண்ணதாசனே அறிமுகப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அது என்ன பாடல் என்பதை இப்போது பார்ப்போம்.
பிரபல யூடியூபர் துரை சரவணன் தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்தக் கவிஞர் தமிழ் சினிமாவில் பாடல் எழுத 10 ஆண்டுகள் மிகுந்த கஷ்டப்பட்டார். இதற்கிடையில் கருணாநிதி நாடங்களுக்கு பாடல்கள் எழுதி வந்துள்ளார். பின்னர் குன்னக்குடி வைத்தியநாதன் பக்தி பாடல்கள் எழுத கேட்க, பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவன் என கூறி மறுத்துள்ளார்.
இருப்பினும் பின்னர் சூலமங்கலம் சகோதரிகள் ஒரு பாடல் எழுதச் சொல்லி கேட்கின்றனர். அவர் மறுக்கவே, குன்னகுடி வைத்தியநாதன் வற்புறுத்தவே, ஒரு முருகன் பாடலை எழுதிக் கொடுத்துள்ளார். அதை சூலமங்கலம் சகோதரிகள், ஒரு நாடகத்தில் பாட, அங்கு சிறப்பு விருந்தினராக வந்த கண்ணதாசன், அந்த பாடலை எழுதியது யார் எனக் கேட்டுள்ளார். அந்த கவிஞர் தான் பூவை செங்குட்டுவன்.
பின்னர் பூவை செங்குட்டுவனிடம் கண்ணதாசன், கந்தன் கருணை படத்தில் இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் எனக் கேட்டுகொள்ளார். அவரும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி எடுக்கப்பட்ட பாடல் தான் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா. இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்று, பூவை செங்குட்டுவன் பிரபலமானார். பின்னர் நூற்றுக்கணக்கான பாடல்களை பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.