/indian-express-tamil/media/media_files/W9Ox8wmOsv2BARIfD7yM.jpg)
கவியரசர் கண்ணதாசன்.
kannadasan | நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், “தில்லான மோகனாம்பாள்” படத்தை யாரும் அவள்ளவு எளிதாக மறந்துவிட முடியாது.
இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் என்றென்றும் ரசிக்கும்படியாக இருக்கும்.
அத்தனைப் பாடல்களும் பலாச் சுளை. இந்தப் படத்தில் வரும் நலம்தானா பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மிகப்பெரிய ஹிட் பாடலாக உள்ளது.
இந்தப் பாடலை பேரறிஞர் அண்ணாவை நினைவில் வைத்து கவியரசு கண்ணதாசன் எழுதியுள்ளார். அண்ணா உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தபோது அவரை நினைத்து நலம்தானா என எழுதியுள்ளார்.
தொடர்ந்து, அவர் முதலமைச்சராக இரண்டு ஆண்டுகளில் நோய்வாய் பட்டதால், அதை வெளிப்படுத்தும் விதமாக கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ எனவும் எழுதியுள்ளார்.
காதலர்கள் குசலம் விசாரித்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல், பின்னாளில் அண்ணாவுக்கும் மிகவும் பிடித்துப் போனது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.