/indian-express-tamil/media/media_files/2025/09/15/download-17-2025-09-15-08-35-49.jpg)
தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் மிகச் சிறப்பாக பேசப்படும் ஒருவராக இருப்பவர் கண்ணதாசன். அவரைப் போல ஒரு கவிஞனை, தமிழ் திரைப்படம் மீண்டும் பெற முடியும் எனக் கூறுவது மிகவும் கடினம். அவரது தனித்திறமை என்னவெனில், எந்த ஒரு இசையையும் கொடுத்தால், அதற்கேற்ப சற்றும் தயக்கமின்றி மிகச் சிறந்த பாடல் வரிகளை சில நிமிடங்களில் எழுதிவிட முடிந்தார். சில நேரங்களில், பத்து நிமிடத்திற்குள் ஒரு முழு பாடலை உருவாக்கி, அதை முடித்து விட்டு பிற வேலையுக்கு சென்றுவிடும் அளவிற்கு ஒரு அதிவேகக் கவிஞராக இருந்தார்.
இசை அமைப்பாளர்கள் அவரிடம் ஒரு தாளத்தை அல்லது மெலடியை கொடுத்தவுடன், கண்ணதாசன் அந்த இசையின் உணர்வையும், அழுத்தத்தையும் மிக நுணுக்கமாக உணர்ந்து, அதற்கு ஏற்றபடி பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பாடலாக்குவார். அவருடைய பாடல்களில் காணப்படும் ஆழமான சிந்தனையும், உருக்கமான உணர்வுகளும், எளிய தமிழில் மிக உயர்ந்த இலக்கியத்தை அளிக்கக் கூடியதாய் இருப்பதாலேயே, அவர் பாடல்களுக்கு இன்னும் பரவலான வரவேற்பு இருக்கிறது.
அவருடைய பங்களிப்பு, தமிழ் திரைப்பட இசை உலகில் ஒரு தனி அடையாளமாகவே உள்ளது. அவர் எழுதிய ஒவ்வொரு வரியும் நம் மனதைக் கடந்து, நம்மை எண்ணத்திலும் உணர்விலும் ஆழமாக இழுக்கும் வகையில் இருக்கும். அதனால்தான், இன்று வரைக்கும் பாடலாசிரியர் கண்ணதாசனின் பாடல்கள் அழியாதவை என்றும், அவர் தமிழ் சினிமா காண்பித்த தலைசிறந்த கவிஞர் என்றும் நாமே பெருமையுடன் கூறுகிறோம்.
அதனாலேயே கண்ணதாசனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு இருந்தது. மேலும் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் போன்றோடின் பாடல்களுக்கு அவர் எழுதிய வரிகள் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனையே வியக்க வைத்துள்ளது என்று கூறலாம். இந்த நிலையில் கிருஷ்ணனை வைத்து 8 பாடல்கள் உருவாக்க திட்டமிட்டு இருந்தனர் ஒரு குழுவினர். இதற்கு ஸ்ரீ கிருஷ்ண கானம் என்று பெயரிடப்பட்டது. அப்போதெல்லாம் சாமி பாடல்களுக்கும் பாடலாசிரியர்கள்தான் பாடல் வரிகளை எழுதுவார்கள்.
எனவே கிருஷ்ணனுக்கு ஏற்றார் போல எட்டு பாடல் வரிகளை எழுதி தர வேண்டும் என்று கண்ணதாசனிடம் கேட்டனர். அந்த பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைக்க இருந்தார். இந்த நிலையில் இது குறித்து கண்ணதாசனிடம் கேட்டபொழுது எப்போது உங்களுக்கு பாடல் வேண்டும் என்று கேட்டார் கண்ணதாசன்.
எப்போது கொடுத்தாலும் சரிதான் என்று கூறியுள்ளார்கள். அதனை கேட்ட கண்ணதாசன் எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எட்டு பாடல்களுக்கான தொகையையும் இப்போதே கொடுத்து விட்டால் இப்போதே நான் எட்டு பாடல்களை எழுதி தருகிறேன் என்று கூறி வரிசையாக 8 பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். அந்த எட்டு பாடல்களுமே இப்போது வரை பிரபலமாக உள்ளன. அதில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயர்பாடி மாளிகையில் என்கிற பாடல்கள் மிகவும் பிரபலமானதாகும் அந்த அளவிற்கு பாடல் வரிகள் எழுதுவதில் சிறப்பு வாய்ந்தவராக கண்ணதாசன் இருந்திருக்கிறார்.
இந்த தகவலை ஒரு பழைய நேர்காணலின் போது ஏ வி எம் குமரன் அவர்கள் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.