/indian-express-tamil/media/media_files/P3qk7UzIP5Em880HlVRu.jpg)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து, முக்கிய நடிகை திடீரென வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Image Zee5)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து, முக்கிய நடிகை திடீரென வெளியேறி உள்ளதாகவும், இனிமேல் அவருக்கு பதில் இந்த நடிகைதான் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இதற்கு முன்னர், ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் நாயகனாக நடிக்கிறார், நாயகியாக அர்த்திகா நடிக்கிறார். நாயகியின் தந்தையாக பிரபல மூத்த நடிகர் ராஜேஷ் நடிக்கிறார்.
கார்த்திகை தீபம் சீரியலில் அர்த்திகா நாயகியாக நடிக்கும் தீபா கதாபாத்திரத்திற்கு எதிராக ஓரவுத்தியின் வில்லத்தனம், சூழ்ச்சி, சதித்திட்டம் என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் திடீர் திருப்பங்கள் என சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தீபாவின் ஓரவுத்தியாக வில்லியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில், நடிகை சுபரக்ஷா நடித்து வந்தார்.
இந்நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுபரக்ஷா தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இந்த சீரியலில் அவருக்கு பதில், நடிகை சாந்தினி இப்போது புது ஐஸ்வர்யாவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.
ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் வில்லியாக நடிக்க உள்ள நடிகை சாந்தினிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.