New Update
/indian-express-tamil/media/media_files/Q3V0HPGiH3wRZqzmG7XJ.jpeg)
இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளேன்; மகன் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி
00:00
/ 00:00
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளேன்; மகன் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி
இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளேன்; மகன் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி
அப்பா இளையராஜாவின் பாடல்களை எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக்ராஜா கூறியதாவது; இந்நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இங்கு இந்த நிகழ்ச்சியை இடம் மாற்றி ஏற்பாடு செய்துள்ளோம். கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும் எனவும் 3-4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
மக்களைப் பார்த்து இலவசமாக பாட சொல்லினாலும் பாடுவேன். பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறும். உதாரணத்திற்கு நம்மூர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து… பாடல்கள் பிடிக்கும் என்றால், வெளியூர்களில் வேறு விதமான பாடல்கள் பிடிக்கும்.
தமிழ் சினிமா இசை என்றாலே அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர். காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன். அதை மட்டுமே பாட உள்ளேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பாட உள்ளேன் என்று தெரிவித்தார்.
முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்து விட்டது குறித்த கேள்விக்கு, தற்பொழுது எல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் போல் பாடல்கள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் இலையில் பலகாரங்கள் அனைத்தும் வைத்து இருப்போம். தற்பொழுது பர்கர் போல் மாறிவிட்டது என்று கூறினார்.
வல்கரான பாடல்கள் தற்பொழுது அதிகரித்து வருவதை குறித்து கேள்வி எழுப்பியதற்கு இதுபோன்ற பாடல்கள் அப்பொழுது இருந்தே இருப்பதாக கார்த்திக் ராஜா கூறினார். மேலும், அடுத்த இரண்டு மாதங்களில் தனது இசையில் இரண்டு படங்கள் வெளியாவதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக அவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க "தென்றல் வந்து தீண்டும் போது" பாடலை பாடினார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.