'காற்றே என் வாசல் வந்தாய்'... வார்த்தை மறந்து நின்ற பாடகர்: தவறை மறைத்த ரஹ்மான் மேஜிக்!

'ரிதம்' படத்தில் இடம்பெற்ற 'காற்றே என் வாசல் வந்தாய்' பாடல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்-கவிதா பௌட்வால் இனிமையான குரல்களிலும் உயிர்பெற்று, காதல் காவியமாகவே மாறியது.

'ரிதம்' படத்தில் இடம்பெற்ற 'காற்றே என் வாசல் வந்தாய்' பாடல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்-கவிதா பௌட்வால் இனிமையான குரல்களிலும் உயிர்பெற்று, காதல் காவியமாகவே மாறியது.

author-image
WebDesk
New Update
shares about rahman music

'காற்றே என் வாசல் வந்தாய்'... வார்த்தை மறந்து நின்ற பாடகர்: தவறை மறைத்த ரஹ்மான் மேஜிக்!

தமிழ் திரையிசையின் பொற்காலத்தில், மனதை வருடிச் செல்லும் பல பாடல்கள் காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்தன. அவற்றில், 'காற்றே என் வாசல் வந்தாய்' பாடலுக்கு தனிச் சிறப்பு உண்டு. 2000-ம் ஆண்டு வெளியான 'ரிதம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும், பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் கவிதா பௌட்வால் ஆகியோரின் இனிமையான குரல்களிலும் உயிர்பெற்று, காதல் காவியமாகவே மாறியது. 2000-ம் ஆண்டில் வெளியானாலும், இன்றும் பலரின் பிளேலிஸ்ட்களில் இந்தப் பாடல் இடம்பெற்று, காதலின் மென்மையான நினைவுகளை மீட்டெடுக்கும் கீதமாகத் திகழ்கிறது.

Advertisment

ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக் இசை:

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தனித்துவமான மற்றும் புதுமையான பாணியில் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். மென்மையான பியானோ இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல், படிப்படியாக வயலின்கள், புல்லாங்குழல் போன்ற கருவிகளின் துணையுடன் மயக்கும் மெலடியாக விரியும். பாடலின் இடையிடையே வரும் கோரஸ் இசை, இப்பாடலுக்கு மேலும் ஒரு மாயாஜாலத் தன்மையைக் கூட்டும். ரஹ்மானின் இசை, காதலின் மென்மையையும், ஏக்கத்தையும், கனவுகளையும் மிக அழகாகப் பிரதிபலித்தது. இந்தப் பாடலின் இசை அமைப்பு, அமைதியான சூழ்நிலையிலும் மனதை நிறைக்கும் அனுபவத்தைத் தருகிறது.

வைரமுத்துவின் கவித்துவ வரிகள்:

Advertisment
Advertisements

வைரமுத்துவின் வரிகள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்தன. "காற்றே என் வாசல் வந்தாய், மெதுவாகக் கதவு திறந்தாய்" என்ற தொடக்கம் முதல், காதலின் பல்வேறு பரிமாணங்களையும், காதலர்களின் மன உணர்வுகளையும் மிக அழகிய தமிழில் அவர் செதுக்கியிருந்தார். அவரது கவித்துவமான வரிகள், பாடலின் உணர்வுப்பூர்வமான ஆழத்தை அதிகரித்தன. வார்த்தைகளில் காதல் கவிதையை வார்த்தெடுத்த வைரமுத்துவின் கைவண்ணம் இந்தப் பாடலில் முழுமையாகப் பிரதிபலித்தது.

உன்னி கிருஷ்ணனின் வசீகரக் குரல்:

பாடகர் உன்னி கிருஷ்ணன், தனது கர்நாடக சங்கீதப் பின்னணியின் பலத்துடன், இப்பாடலுக்கு தனித்துவமான உணர்வைக் கொடுத்தார். அவரது குரலில் வெளிப்படும் தெளிவும், ஆழமும், உச்சரிப்பின் நேர்த்தியும் பாடலை மேலும் அழகாக்கின. காதலின் மென்மையான உணர்வுகளை, மிகைப்படுத்தல் இல்லாமல், இயல்பான ஏக்கத்துடன் அவர் வெளிப்படுத்திய விதம், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, "காற்றே என் வாசல் வந்தாய்" என்ற முதல் வரியிலேயே அவரது குரல் செவிகளில் தேனாகப் பாயும்.

அண்மையில், அந்திமாலை என்ற யூடியூப் சேனல் நடத்திய நேர்க்காணலில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்துகொண்டு, ’காற்றே என் வாசல் வந்தாய்’ பாடல் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

’காற்றே என் வாசல் வந்தாய்’ பாடல் ரெக்கார்டிங்கில், காற்றே என் வாசல் வந்தாய்…மெதுவாக கதவு திறந்தாய்…காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்.. என்ற வரிகள் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென மெதுவாக கதவு திறந்தாய் என்ற வரிகள் உடனடியாக நினைவில் வராமல் போய்விட்டதாகவும், ஆனால், பைனல் வெர்ஷனில், அதனை மேஜிக்காக ரகுமான் மாற்றியதாக உன்னி கிருஷ்ணன் கூறி உள்ளார். பாடல் வரிகள் மறந்து இடையில் நிறுத்தியதை தனது மேஜிக் இசையால், ரகுமான் மாற்றி இருப்பதாக கூறினார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: