Katrina Kaif: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தற்போது பிஸினஸ் வுமனாகவும் (தொழில்முனைவோராக) மாறியுள்ளார். தனது சொந்த மேக்கப் பிராண்டானா ‘கே’வை அறிமுகப்படுத்திய கத்ரீனா கைஃப், தென்னிந்திய நடிகை நயன்தாராவை போட்டோ ஷூட்டிங்கிற்காக அழைத்திருந்தார்.
Advertisment
இதுகுறித்து, நயன்தாராவுடன் தான் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கத்ரீனா, “கே பியூட்டி கேம்பைனின் ஒரு பகுதியாக, தனது பரபரப்பான ஷெட்யூலுக்கு இடையில் மும்பைக்கு வந்த கார்ஜியஸ் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி” என்றுக் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், கத்ரீனாவும், நயன்தாராவும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
கத்ரீனா தனது பிஸினஸை புரொமோட் செய்யும் விதமாக பல சுவாரஸ்யமான விஷயங்களை செய்து வருகிறார். நடிகர் ரன்வீர் சிங்குடன் திங்கட்கிழமையன்று ஒரு ஃபன்னி வீடியோவை பதிவிட்டார். விருது விழாவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கத்ரீனாவிடம் கொஞ்சம் மேக்கப் போடச் சொல்லி கேட்டிருந்தார் ரன்வீர். அவர் கண்களில் மை தீட்டி, தனது மேக்கப் திறனை வெளிப்படுத்தினார் கத்ரீனா. இந்த வீடியோ ரசிகர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிடமிருந்து சிரிப்பை பதிலாகப் பெற்றது.
தவிர, பாரத்தின் ரிலீஸுக்குப் பிறகு, ரோஹித் ஷெட்டியின் ’சூர்யவன்ஷி’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் கத்ரீனா. இதில் அக்ஷய் குமார் போலீஸாக நடிக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அக்ஷய்யும் கத்ரீனாவும் இணைகிறார்கள். தீபாவளிக்கு விஜய்யுடன் பிகில், பொங்கலுக்கு ரஜினியுடன் தர்பார் என முக்கியப் படங்களின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.