/tamil-ie/media/media_files/uploads/2018/09/d154.jpg)
குரோர்பதி 10
அமிதாப் பச்சன் நடத்தும் 'குரோர்பதி' ரியாலிட்டி ஷோவின் 10-வது சீசன் இன்று தொடங்குகிறது.
அகில இந்திய அளவில் வெகு பிரபல மான டி.வி. நிகழ்ச்சி குரோர்பதி (கோடீஸ்வரன்). மிகக் கடினமான பொது அறிவுக் கேள்விகளுடன், அமிதாப் பச்சனின் அசத்தலான வார்த்தை வீச்சும் கலந்து, இந்தியா முழுக்க எண்ணற்ற பார்வையாளர்களை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி குரோர்பதி.
இம்முறை, போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கே கடுமையான கேள்விகளை குரோர்பதி டீம் ஏற்பாடு செய்துள்ளதாம். மிகவும் திறமைசாலிகளை மட்டுமே தேர்வு செய்வதே இதன் நோக்கமாம்.
மேலும், தொழில்நுட்பம் சார்ந்து பல புதிய யுக்திகளை இந்த சீசனில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வெள்ளிக்கிழமைதோறும், சமூகத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய நிஜ வாழ்க்கை ஹீரோக்களை தேர்வு செய்து போட்டியை நடத்தவும் குரோர்பதி டீம் முடிவு செய்துள்ளதாம்.
12 வாரங்கள் (60 எபிசோட்கள்) என குரோர்பதி 10 சீசன் நடக்கவுள்ளது. இன்று (செப்.3) திங்கள் - வெள்ளி, இரவு 9 மணிக்கு சோனி டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.