/tamil-ie/media/media_files/uploads/2023/05/Vairamuthu-AR-Rahman.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்துவிடம் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து, பாடல்வரிகளை எழுதி வாங்கியுள்ளார். அந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இது என்ன படம் என்ன பாடல் என்பதை பார்ப்போமா?
இந்தியாவுக்கு 2 ஆஸ்கார் விருது பெற்று கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். ரோஜா படம் தொடங்கி தற்போதுவரை மணிரத்னத்தின் அனைத்து படத்திற்கும் ஏ,ஆர்.ரஹ்மான் தான் இசை. அந்த வகையில் உருவான ஒரு படம் தான் அலைபாயுதே. 2000-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் அப்போது பெரிய ட்ரெண்டிங்காக இருந்தது. படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற யாரோ யாரோடி உன்னோட புருஷன் என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நாயகி ஷாலினி பாடுவது போல் அமைந்த இந்த பாடல் பதிவின்போது மும்பையில் இருந்து வந்த பாடகிகள் பாடலை பாடியுள்ளனர். ஆனால் இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திருப்தி இல்லை.
இதன் காரணமாக அவர்களை திரும்ப திரும்ப பாட சொல்லி கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூனை மாதிரி பாடலை பாட சொல்ல, ரஹ்மானுக்கு மிகவும் பிடித்துள்ளர். முதல் வரியாக யாரோ யாரோடி உன்னோட புருஷன் என்பது போல் அடுத்த வரியும் இதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்பிய ரஹ்மான்’, நள்ளிரவு 2 மணிக்கு கவிஞர் வைரமுத்துவுக்கு போன் செய்துள்ளார். தூக்கத்தில் போனை எடுத்த வைரமுத்து, காலையில் எழுதி தருகிறேன் என்று கூறியுள்ளார்.
காலையில் பாடகிகள் மும்பை சென்றுவிடுவார்கள் இப்போதே நீங்கள் சொல்லுங்கள் என்று ரஹ்மான் சொல்ல, சரி எழுதிக்கொள், யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் என்று கூறியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு சொன்ன இந்த வரிகள் தற்போதுவரை பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த பாடலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.