மலையாள நடிகை ஜானகி சுதீர் சமூபத்திய போட்டோ ஷூட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண்கள் செய்தால் வழக்கு பெண்கள் செய்தால் டிரெண்டா ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானவர் நடிகை ஜானகி சுதீர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ’தி ஹோலி ஊண்ட்” என்ற தன்பால் ஈப்பால் காதல் வயப்படும் இரு பெண்களின் கதைதான் இப்படம். தற்போது அது வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இவர் கேரள வேஸ்டி கட்டிக்கொண்டு, மேலாடை அணியாமல் நகைகளை மட்டும் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் எடுத்துகொண்டார். இந்த புகைப்படங்களுக்கு வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும். ரன்பீர் கபூரோடு விவகாரத்தோடு இணைத்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரன்பீர் கபூர் ஆடையில்லாமல் போட்டோ ஷூட் செய்தால் மட்டும் வழக்கு தொடர்ப்படுகிறது, இதுவே பெண்கள் செய்தால் மட்டும் டிரெண்டாகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.