Advertisment

இழிவான சிந்தனை கொண்ட யாரும் தப்பிக்க முடியாது: மன்சூர் அலிகான் விவகாரத்தில் குஷ்பு கருத்து

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் நடிகை குஷ்பு ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இது குறித்து மகளிர் தேசிய ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kushboo

இழிவான சிந்தனை கொண்ட யாரும் தப்பிக்க முடியாது; மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

trisha | mansoor-ali-khan | kushboo | நடிகை திரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி உள்ளன. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அவரின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் நடிகை குஷ்பு ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இது குறித்து மகளிர் தேசிய ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளேன்.

அவரின் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இழிவான சிந்தனை கொண்ட யாரும் தப்பிக்க முடியாது. இந்த விஷயத்தில் திரிஷா, மற்ற பெண்களுக்கு ஆதரவாக நான் உள்ளேன்.

பெண்கள், அவர்களின் கண்ணியம் காக்க போராடி வருகிறோம். இவரை போன்றவர்கள்தான் பெண்கள் குறித்த இழிவான கருத்துகளை கூறிவருகின்றனர்” என்றார்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இந்தப் படத்தின் விழா ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான்,“படத்தில் பாலியல் காட்சிகள் இல்லை என திரிஷாவை தொடர்புபடுத்தி பேசினார்.

இது சர்ச்சையானது. மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் திரிஷா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trisha Mansoor Ali Khan Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment