Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள நானே வருவேன் படத்திலும் நடிக்க உள்ளார் தனுஷ்.

author-image
WebDesk
New Update
Kollywood News Dhanush joins hands with Mari Selvaraj for his next movie

Kollywood News Dhanush : சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது கர்ணண் திரைப்படம். தமிழகத்தில் 1990களின் பிற்பாதியில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அசுரன் படத்தை போன்றே கர்ணனிலும் அசுரத்தனமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ்.

Advertisment

தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். கர்ணன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். படத்தின் “போஸ்ட் - ப்ரொடெக்‌ஷன்” வேலைகள் சென்று கொண்டிருப்பதாக கூறிய அவர் அடுத்த ஆண்டில் படபிடிப்பு துவங்கும் என்பதையும் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி, தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள நானே வருவேன் படத்திலும் நடிக்க உள்ளார் தனுஷ். அதற்கான ப்ரீ-ப்ரொடெக்‌ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment