/indian-express-tamil/media/media_files/2025/09/19/bala-2025-09-19-15-55-19.jpg)
சர்வதேச கைக்கூலி இல்ல... சராசரி தினக் கூலி; விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கே.பி.ஒய்.பாலா
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும், பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலை கிராம மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார்.
கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று, சினிமா விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பாலாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை நட்சத்தரங்கள் பலரும் பாலாவின் செயலுக்கு உதவி வருகின்றனர்.
இதனிடையே கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். 2018-ம் அண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், புலிக்குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடியனாக நடித்திருந்தார்.
நடிகர் பாலா கதாநாயகனாக நடித்திருந்த ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பாலாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு புறம் பாலா தனது திறமையினால் முன்னேறி வருகிறார். மறுபுறம் இவரது சமூக சேவைகள் தொடர்பாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை குறித்து வரும் விமர்சனங்களுக்கு நடிகர் பாலா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “சர்வதேச கைக்கூலி என்று சொல்வதை பார்க்கும் பொழுது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நொடி வரைக்கும் ஒருத்தரிடமும் ஒரு ரூபாய் காசு வாங்குனது இல்ல. என் சொந்த சம்பாத்தியத்தில் தான் நான் சமூக சேவையை செய்து கொண்டு வருகிறேன்.
நாங்க வாங்கி கொடுத்த ஆம்புலன்ஸ் எல்லாம் நன்றாக போய்கொண்டிருக்கிறது. நான் நிகழ்ச்சிகளுக்கு போகிறேன். விளம்பரம் செய்கிறேன். இஸ்டாவில் புரொமோஷன் செய்கிறேன். இதன் மூலம் வரும் வருவாயில் தான் சமூக சேவை செய்கிறேன். நான் மருத்துவமனை கட்டவில்லை கிளினிக் தான் கட்டுகிறோம். என் சொந்த இடத்தில் தான் கட்டுகிறேன்.
நான் வாங்கும் பணத்தில் வீடு கட்டி கார் வாங்கினேன் என்றால் இப்படி பேசியிருக்க மாட்டார்கள். அதை சமூக சேவைக்கு பயன்படுத்துவதால் தான் இப்படி சொல்கிறார்கள். என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் சமூக சேவையை செய்து கொண்டு தான் இருப்பேன். நான் சர்வதேச கைக்கூலி இல்ல சராசரி தின கூலி " என்றார்.
மேலும் பாலா பேசி வெளியிட்ட வீடியோவில், ”பாலா ஒரு கைக்கூலி என பலரும் விமர்சித்து வருகின்றனர். நானும் இரண்டு நாட்களாக இப்ப முடியும் அப்ப முடியும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு படம் நடித்த பிறகு இப்படியெல்லாம் செய்வார்கள் என்று சத்தியமாக எனக்கு தெரியாது. இந்த ஆம்புலன்ஸ் மூலமாக எவ்வளவு பேர் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
எத்தனை குழந்தைகள் படித்திருக்கிறார்கள். நாம் செய்யும் நல்லதை யாரும் பேசுவது இல்லை. ஒரு ஸ்டிக்கரை வைத்து விமர்சிக்கிறார்கள். சர்வதேச கைக்கூலி என்கிறார்கல் நான் தின கூலி. நான் இரவும் பகலுமாக ஓடி உழைப்பதில் இதையெல்லாம் செய்து வருகிறேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.