Advertisment

சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு

சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கீர்த்தி சுரேஷ் பாராட்டு

கீர்த்தி சுரேஷ் பாராட்டு

சென்னை விமானநிலைய அதிகாரிகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை ஒருங்கிணைந்த  புதிய பன்னாட்டு  விமான நிலையம் நவீன வசதிகளுடன், ரூ.1260 கோடி  முதலீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி புதிய முனையத்தை திறந்து வைத்தார். இதில் 108 குடியுரிமை  கவுண்டர்கள், 100 பயணிகள்  பாதுகாப்பு  கவுண்டர்கள், 17  லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் 6 கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் விமான நிலையம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சோதனை  முடித்து கொண்டு  தனது சமூக வலைதளமான எக்ஸ்சில், சர்வதேச முனையத்தில் சிறப்பாக  அமைதியாக நடந்த குடியுரிமை சோதனை, விமான நிலையம் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தது. சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

keethi suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment