Advertisment

மீண்டும் லோகேஷ் - ரத்னகுமார் கூட்டணி : சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் ; புகைப்படங்கள் வைரல்

லோகேஷ் கனகராஜூவுடன் இணைந்து கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை ரத்ன குமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
ratnakumar Likesh
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து கூலி என்ற படத்தை இயக்க உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது நண்பர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் இடம்பெற்றுள்ளார்.

Advertisment

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனராஜ், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். லியோ படத்திற்கு பிறகு அடுத்து ரஜனிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது தனது நண்பர்களுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்தாலும், லோகேஷ் கனகராஜின் கடவுள் நம்பிக்கை உடையவர். ஏற்கனவே லியோ படம் வெளியான சமயத்தில் அவர் தனது நண்பர்களுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சபரிமலை சென்றுள்ளார். இந்த பயணத்தில், லோகேஷ் கனகராஜுன் மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ரத்னகுமார் இணைந்துள்ளார்.

ரத்னா கோவிலில் இருந்து புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். லோகேஷ், ரத்னா மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் துண்டு அணிந்திருந்தனர். தனது படத்தின் இயக்கம் தொடர்பான பணிகளில் இருப்பதால் ரத்னகுமார் கூலி படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை திரும்பியதும், லோகேஷ் கனகராஜ், ‘சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்தின் 171வது படமான கூலியின் படப்பிடிப்பைத் தொடங்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு கடத்தல்காரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் பணியாளர்கள் விவரம் இன்னும் மறைக்கப்படவில்லை. 2025ல் கூலி படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லோகேஷ் தமிழில் தற்போது அதிக படங்கள் வரிசையாக உள்ளது. கூலிக்கு பிறகு கார்த்தியுடன் கைதி 2 படத்தை இயக்குகிறார். இது கைதி முதல் பாகத்திற்கு பிறகு டில்லிக்கு என்ன ஆனது என்பதை சொல்லும் படமாக இருக்கும். அதே சமயம், இந்தப் படம் விக்ரம் மற்றும் லியோவை உள்ளடக்கிய லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும்.

கைதிக்குப் பிறகு, சூர்யாவுடன் விக்ரமின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு தனிப் படத்தை இயக்க உள்ள, லோகேஷ் மற்றும் கமல்ஹாசனின் இரண்டாவது கூட்டணியை குறிக்கும் விக்ரம் 2 உடன் பிரபஞ்சம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lokesh Kanagaraj Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment