தமிழ் ஒ.டி.டி. வரலாற்றில் புதிய முயற்சியாக, பிபி அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த ஜன.30 அன்று தொடங்கியது. இதில் வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி என கடந்த 5 சீசன்களில் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இதையும், வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் விக்ரம் பட ஷெட்யூல் இடிப்பதால்’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். அவருக்கு பதிலாக கடந்த வாரத்திலிருந்து சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதுவரை சுரேஷ், சுஜா, அபிநய், ஷாரிக், தாடி பாலாஜி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினர். வனிதா தானே அடம்பிடித்து பிபி வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது ஏற்கெனவே எலிமினேட் ஆகி வெளியே போன சுரேஷ் தாத்தா வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்குள் வந்தார். பிரபல விஜய் டிவி காமெடியன் சதீஷூம் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆனார்.
இப்போது சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்திக்கு அடுத்தபடியாக வைல்ட் கார்டு என்ட்ரி பற்றிய ஒரு சலசலப்பு உள்ளது. 'பிக் பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியில் வைல்டு கார்டில் லாஸ்லியா மரியநேசன் நுழைவார் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.
இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
தற்போது லாஸ்லியா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“