Advertisment

மீம்ஸ் மெட்டீரியலாக மாறிய லவ்வர் பட நடிகை... காரணம் இதுதான் : வைரல் போஸ்ட்

ரினி பாட் ஆன் எக்ஸ் என்று அழைக்கப்படும் நடிகை ஹரிணி சுந்தர்ராஜன், லவ்வர் படத்தில் நடித்ததற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Lover Movie Actress
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சமீபத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் நாயகியின் தோழியாக நடித்த நடிகை ஹரிணி சுந்தர்ராஜன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். அவரது நடிப்பில் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான லவ்வர் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.

மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் வெளியான இந்த படம், குட்நைட் திரைப்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருந்தது. அதே சமயம் குட்நைட் படத்தில் அமைதியாக நடித்திருந்த மணிகண்டன் இந்த படத்தில் கோபக்கார இளைஞராக சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தில், தோழியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் நடிகை ஹரிணி சுந்தர்ராஜன்.

ரினி பாட் என்ற சமூக ஊடகப் பயனர் பெயரால் அறியப்பட்ட ஹரிணி, தனது ட்வீட்டர் பதிவு மற்றும் போட்டோஷூட் மூலம் புகழ் பெற்றார். அதேபோல் விரல் நுனியில் தமிழ் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இதனிடையே லவ்வர் படம் வெளியானதில் இருந்தே ஹரிணி அப்படத்தில் நடித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட ஹரிணி ஒரு கட்டத்தில் பதிலடி கொடுக்கும் வகையில், கருத்து வேறுபாடுகளை அவமரியாதையாகக் காட்டத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், லவ்வரில் ஐஷுவாக நடித்ததற்காக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.. இன்று காலை, என் எக்ஸ் டிஎம்-ல் உள்ள சில முட்டாள்கள் லவ்வரில் ஐஷுவைப் பிடிக்காததால் என்னைத் திட்டினர். முதலாவதாக, ஒரு கதாபாத்திரம் அவர்களுக்குப் பிடிக்காததால், ஒரு நடிகரிடம் இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைப்பது எனக்கு எந்தவிதத்திலும் பாதிப்பில்லை, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இந்த நடத்தை அதிக ஐஷுவின் தேவையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது என்பதை இங்கு யாரும் உணரவில்லையா? கருத்து வேறுபாடுகளை அவமரியாதையுடன் காட்ட வேண்டிய அவசியமில்லை. என்று அவர் மேலும் கூறினார்.

திவ்யா (ஸ்ரீ கௌரி பிரியா) மற்றும் அருண் (மணிகண்டன்) ஆகியோருக்கு இடையேயான காதல் கதை தான் இநத படம். அருண் எவ்வளவு தான் அவமானப்படுத்தி பேசினாலும் ஒவ்வொருமுறையும் திவ்யா அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். இது தொடரும் போது திவ்யாவின் நெருங்கிய தோழியான ஐஷு, ஒருமுறை உறவை முறித்துக் கொள்ளும்படி தன் தோழிக்கு அறிவுறுத்துகிறாள். இதனால் ஐஷு ஒரு மோசமான நண்பராக இருப்பதை தெரிந்துகொள்கின்றனர்.

இதுவே இருவருக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதன் காரணமாகத்தான் ஹரிணியின் ஐஷு கேரக்டர் ஒரு மீம் மெட்டிரியலாக மாறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment