ஆங்கிலத்தில் படிக்க..
ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் 2-ம் பாகத்தை தயாரிப்பதன் மூலம் லைகா நிறுவனம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைக்கிறது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான ப்ரித்விராஜ் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் லூசிஃப்ர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தி கம்ளீட் ஆக்டர் மோகன்ல், மஞ்சுவாரியார், டவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ப்ரித்விராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். முரளிகோபி கதையில் உருவான இந்த படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படங்களின் ஒன்றாக மாறியது.
மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்ட லூசிஃபர் திரைப்படம் 2 மொழிகளிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் இந்த படத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றது. மலையாளத்தில் லூசிஃபர் திரைப்படம் வெளியான ஒரு சில மாதங்களில் படத்தின் 2-ம் பாகம் எல்2 இ எம்புரான் என்ற பெயரில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தை கையில் எடுத்துள்ளனர். முரளி கோபி கதையில் ப்ரித்விராஜ் இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் மூலம் லைகா நிறுவனம் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைக்கிறது. லைகா மற்றும் மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ் இந்த படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளது.
சமீபத்தில், இரண்டாம் பாகத்தின் ப்ரோமோவை பிருத்விராஜ் வெளியிட்டார். அதில் மோகன்லாலின் கேரக்டர் மீண்டும் வருவதாகக் கூறுவது போல் ப்ரமோ முடிவடைகிறது. ஆசீர்வாத் சினிமாஸுடன் லைகா இணைந்துள்ளதால் எம்புரான் படத்தின் எதிர்பார்ப்பு முதல் பாகத்தை விட பெரிதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் சமீபத்திய ப்ரோமோவைப் பகிர்ந்த இயக்குனர் ப்ரித்விராஜ், “மலையாளத் திரையுலகிற்கு லைகா நிறுவனத்தை வரவேற்பது படக்குழுவுக்கு கிடைத்த பெருமை. ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் எல்2 இ எம்புரான் திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 5-ல் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்2 இ எம்புரான் படத்தின் மூலம், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றொரு பெரிய பட்ஜெட் படத்தை கையில் எடுத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ரஜினிகாந்துடன் தலைவர் 170 மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் இணைந்துள்ளது. அதேபோல் இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசனுடன் இந்த லைகா நிறுவனம் இந்தியில் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் இணைந்துள்ளது.
சமீபத்தில், தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், அனிருத் ரவிச்சந்தர், டிஜே ஞானவேல் மற்றும் சுபாஸ்கரன் ஆகியோரின் போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. மேலும் படத்தின் புதிய அப்டேட்கள் அடுத்தடுத்த நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தின் போஸ்டரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“