டூயட் பாட்டுல வள்ளலார் வரிகள்; ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர், அசத்திய கண்ணதாசன்: எந்த பாட்டு தெரியுமா?

எம்.ஜி.ஆர் கேட்டதற்காக டூயட் பாட்டில் வள்ளலார் வரிகளை சேர்த்து கவிஞர் கண்ணதாசன் அசத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆர் கேட்டதற்காக டூயட் பாட்டில் வள்ளலார் வரிகளை சேர்த்து கவிஞர் கண்ணதாசன் அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
kannadhasan

டூயட் பாட்டுல வள்ளலார் வரிகள்; ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர், அசத்திய கண்ணதாசன்: எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீதர். ’வென்னிற ஆடை’, ’காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட பல ஃபீல் குட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 1974-ஆம் ஆண்டு  இவர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘உரிமைக் குரல்’. 

Advertisment

இந்த படத்தில்  லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எம்.ஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க, வாலி கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ’உரிமைக்குரல்’ திரைப்படம் தெலுங்கில், நாகேஷ்வர ராவ் நடிப்பில் வெளியான ‘தேசரா புல்லோடு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். 

இந்த படத்திற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் – ஸ்ரீதர் கூட்டணியில் ’அன்று சிந்திய ரத்தம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுள்ளது. ஆனால் சில நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டது.

Advertisment
Advertisements

அதன்பிறகு எம்.ஜி.ஆர் படத்தை இயக்காத ஸ்ரீதர், சிவாஜி படத்தை இயக்கியபோது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார். அப்போது அவரது நண்பர் கொடுத்த ஐடியாவில் தான் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேட்க, அவரும் பழையதை மறந்து கால்ஷீட் கொடுத்துள்ளார். 

அதன்பிறகு உருவான படம் தான் ’உரிமைக்குரல்’. ஒரு பண்ணையாருக்கும் விவசாயிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதைக்களம். மாபெரும் வெற்றியை பெற்ற இந்த படத்தின் மூலம் ஸ்ரீதர் தனது கடன்களை அடைத்துள்ளார்.

‘உரிமைக்குரல்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’விழியே கதை எழுது’ பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடலாக உள்ளது. இந்த பாடலில் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டதற்காக வள்ளலார் வரிகள் சேர்க்கப்பட்டிருந்தது குறித்து எம்.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

அதாவது, எம்.ஜி.ஆர் எம்.எஸ்.வியை அழைத்து ரூயட் பாட்டில் வள்ளலார் வரிகளை சேர்க்க சொல்லியுள்ளார். எம்.எஸ்.வி டூயட்டில் எப்படி வள்ளலார் வரிகளை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளார். அதற்கு வள்ளலார் வார்த்தையை சேர்க்க சொல் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் தொலைபேசியை வைத்துள்ளார். 

அப்பறம் எம்.எஸ்.வி, கவிஞர் கண்ணதாசனுக்கு தொடர்பு கொண்டு வள்ளலார் வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அவர் அப்படியா எழுதிக் கொள் என்று சொல்லிவிட்டு ‘தீபம் எரிகின்றது, ஜோதி தெரிகின்றது. காலம் மலர்கின்றது, கனவு பலிக்கின்றது’ என்று சொல்லிவிட்டு வைத்துள்ளார். இப்படி டூயட் பாட்டில் வள்ளலார் வரிகளை வைத்து கவிஞர் கண்ணதாசன் அசத்தியுள்ளார்.

Kannadasan Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: