Advertisment

உதவி இயக்குனர்களை அடித்து உதைக்கிறேனா? மாரி செல்வராஜ் விளக்கம்

உதவி இயக்குனர்களை அடிப்பதாக விமர்சனம்; மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம்

author-image
WebDesk
New Update
Mari Selvaraj

மாரி செல்வராஜ்

உதவி இயக்குனர்களை அடித்து உதைப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

பரியேறும் பெருமாள் என்ற வித்தியாச முயற்சியுடன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படமே அனைவரது கவனத்தையும் ஈர்த்து பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து, இரண்டாவதாக தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இந்தப் படமும் பெரிய ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்: உதயநிதி கூட நடிக்க கூடாதுன்னு வீட்டுக்கே வந்து மிரட்டல்: ஷாக் நியூஸ் சொன்ன கீர்த்தி சுரேஷ்

இதனையடுத்து தனது மூன்றாவது படமாக உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் உதயநிதி தவிர வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில், வடிவேலுவும் உதயநிதியும் கலந்துகொண்ட மாமன்னன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது இருவருமே சொல்லி வைத்ததை போல ஒரே பதிலை கூறினர். அதாவது மாரி செல்வராஜ் செம்ம டென்ஷன் பார்ட்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர்களை அடித்து விரட்டுவார், கண்ணாபின்னானு கத்துவார், ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும் என ஜாலியாக கலாய்த்தனர். அதேநேரம் மாரி செல்வராஜ் முன்னர் ஒரு பேட்டியில் என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த இரண்டு பேட்டிகளும் சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் குறித்து மாரி செல்வராஜிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, மாரி செல்வராஜ் ஹிட்லர் போல தனது உதவி இயக்குநர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சனங்கள் வருகிறதே என கேட்கப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், நான் ஹிட்லர் எல்லாம் கிடையாது, பைத்தியக்காரன், இதற்கு எல்லாமே வடிவேலுவும் உதயநிதியும் தான் காரணம் என அவர்களை வைத்துக்கொண்டே கூறியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் தான் என்னை திட்டுவார்கள், அவர்கள் எல்லாருமே என் ஊர்காரர்கள் தான். அதனால் உரிமையோடு திட்டுவேன், நான் உதவி இயக்குநராக இருந்தபோது எனக்கு கிடைத்த அனுபவங்கள் வேறு, இப்போது சினிமாவின் நிலை வேறு. எனவே அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஊரில் என்னை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள், ஆனால், நான் ஜெயித்த பின்புதான் எல்லாம் மாறியது என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment