மதராஸி முதல் ஹீரோ இந்த நடிகர் தான், அவரும் ஓகே சொன்னார்; கடைசில எல்லாம் மாறிப்போச்சி; ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராசி திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு முன்னதாக நடிக்க வைக்க வேறொரு ஹீரோதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதன் ஆரம்ப திரைக்கதை எழுதும் கட்டங்களிலேயே இது திட்டமிடப்பட்டது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராசி திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு முன்னதாக நடிக்க வைக்க வேறொரு ஹீரோதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதன் ஆரம்ப திரைக்கதை எழுதும் கட்டங்களிலேயே இது திட்டமிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
murugadoss

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘மதராசி’. இதில் நடிகர்கள் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு, ஷாருக் கானை நடிக்க வைப்பது பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பரிசீலித்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து கலாட்டா பிளஸ்-க்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.முருகதாஸ், அந்த வதந்திகளை உறுதிப்படுத்தினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

“சுமார் 7-8 வருடங்களுக்கு முன்பு, ‘மதராசி’ படத்தின் கதை பற்றிய அடிப்படை யோசனை உருவானபோது, அதன் மையக் கதாபாத்திரம் குறித்து ஷாருக் கானிடம் சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது முழு ஸ்கிரிப்ட்டும் தயாராக இல்லை. அந்த சந்திப்பின்போது, ஷாருக் கான் எனது யோசனையை மிகவும் விரும்பினார். அந்த ஒரு மையக் கதாபாத்திரத்தை வைத்தே படத்தில் நடிக்க சம்மதித்தார்,” என்று முருகதாஸ் கூறினார்.

ஆனால், இருவரின் பிசியான ஷெட்யூல் காரணமாக அப்போதைய நிலையில் இந்த படம் தள்ளிப்போனதாக முருகதாஸ் கூறினார். முருகதாஸ் தொடர்ந்து கூறுகையில், “இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஷாருக் கானை பின்தொடர்ந்து தொடர்பு கொண்டேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு யாரையும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்யும் பழக்கம் எனக்கு இல்லை. அதனால், நான் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்,” என்று தெரிவித்தார்.

Advertisment
Advertisements

கடைசியாக, சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனைத் தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் பேசும்போது, “சமீபத்தில் மீண்டும் இந்த கதை குறித்து நான் யோசித்தபோது, சிவகார்த்திகேயன் சார் தான் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. அவரது உடல் தகுதி மற்றும் சுறுசுறுப்பு இந்த கதைக்கு பொருத்தமாக இருந்தது. அதன் பிறகு, கதையையும் கதாபாத்திரத்தையும் அவராகவே மாற்றியமைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தோம்,” என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

Ar Murugadoss Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: