/indian-express-tamil/media/media_files/2025/07/27/madhampatty-rangaraj-2025-07-27-08-51-03.jpg)
பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்டா மோசடிப் புகார் அளித்துள்ளார். ரங்கராஜ் தனது கணவர் என்றும், தாங்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் கிரிசல்டா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த உறவின் மூலம் தான் கர்ப்பமானதாகவும், ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும் ஜாய் கிரிசல்டா குற்றம் சாட்டியுள்ளார். தனக்கும், தனது குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று ஜாய் கிரிசல்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேலாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜாய் கிரிசல்டா தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், ரங்கராஜை வி.ஐ.பி போல் நடத்துகின்றனர் என்றார். ஆனால் அவர் தனக்கு எதிராக அவதூறான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் காவல்துறையும், அரசும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாய் கிரிசல்டா வலியுறுத்தியுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜாய் கிரிசல்டாவுடனான உறவு குறித்த சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேலாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் ஜாய் கிரிசல்டா வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு எதிராக அவதூறான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் ஜாய் கிரிசல்டா குற்றம் சாட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.