விஜய் கூட நடித்த அந்த ஒரே படம்தான்; அப்புறம் தமிழ் சினிமா பக்கமே திரும்பி பார்க்காத உலக அழகி!

தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா; விஜயின் பொறுமை குறித்து நெகிழ்ந்த தாயார் மது சோப்ரா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thamizhan vijay priyanka

விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா

அழகிப் போட்டிகளில் வெற்றிபெறும் பெரும்பாலான மாடல்கள் இந்தித் திரையுலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன், தென்னிந்தியத் திரையுலகில் எப்படி ஆரம்ப பிட்ஸ்டாப்பை உருவாக்குகிறார்கள் என்பது சுவாரஸ்யமானது. முன்னாள் உலக அழகியும் தேசிய விருது பெற்ற நடிகையுமான பிரியங்கா சோப்ரா அப்படி தமிழில் அறிமுகமானவர் தான். அழகிப் போட்டியின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்ட உடனேயே, சினிமாவில் வாழ்க்கையை தொடங்காமல் இருந்த பிரியங்கா சோப்ரா, பின்னர் நடிப்பு வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டார். மேலும் பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டு விஜய்யின் தமிழ்த் திரைப்படமான ’தமிழன்’ மூலம் அறிமுகமானார்.

Advertisment

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

பிரியங்காவுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து லெஹ்ரன் ரெட்ரோவிடம் பேசுகையில், பிரியங்காவின் தாயார் மது சோப்ரா, “பிரியங்கா உண்மையில் படத்தில் நடிக்க முடியாது என்று கூறினார், ஆனால் அவர்கள் எப்படியோ அவரது சகோதரரை அணுகினர், பின்னர் அவர் தனது தந்தையை அழைத்து, இரண்டு மாதங்களுக்கு கோடை விடுமுறையில் அதை ஷாட் செய்யட்டும் என்று கூறினார். இதில் நிறைய சமாதானப்படுத்தல்கள் இருந்தன, பிரியங்காவுடைய தந்தை நம்பிக்கை கொடுத்தார், பிரியங்கா தந்தைக்காக நடிக்க ஒப்புக் கொண்டார்,” என்று கூறினார்.

விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, பிரியங்கா எப்படி ஒரு பெரிய படத்தில் அறிமுகமானார் என்பதைக் குறிப்பிட்ட மது சோப்ரா, “விஜய் மீது பிரியங்கா உண்மையிலேயே மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார், ஏனென்றால் பிரியங்கா விஷயத்தில் விஜய் மிகவும் பொறுமையாக இருந்தார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம் நடன அமைப்பாளராக இருந்தார், மேலும் டான்ஸ் ஸ்டெப்கள் கடினமாக இருந்தன. விஜய் ஒரு தொழில்முறை நடனக் கலைஞர், அவருடன் இணைந்து டான்ஸ் ஆடுவது கடினமாக இருந்தது. உண்மையில், புதிய மொழியைக் கற்றுக்கொள்வது, உரையாடல்களைப் பேசுவது மற்றும் நடனமாடுவது கடினமாக இருந்தது,” என்று கூறினார். இருப்பினும், படப்பிடிப்பின் போது, பிரியங்கா பழகிக் கொண்டதாகவும், மேலும் விஜய்யுடன் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் மது சுட்டிக்காட்டினார்.

Advertisment
Advertisements

உண்மையில், பிரியங்கா சோப்ரா ஒரு சில விஷயங்கள் சரியாக கிடைக்கவில்லை என்றால் எப்படித் திட்டுவார் என்பதை மது சுட்டிக்காட்டினார். “எனவே, நாங்கள் அவர்களிடம் எந்த ரீல்களையும் வீணாக்க வேண்டாம் என்று சொன்னோம், மாலையில் பிரியங்காவை அறையில் பயிற்சி செய்ய அனுமதிக்க கேட்டோம், அதனால்தான் பிரியங்கா ஸ்டெப்ஸ்களையும், மூவ்மெண்ட்களையும் சரியாக செய்தார். பின்னர், மக்கள் அவரைப் பாராட்டத் தொடங்கினர், மெதுவாக, பிரியங்காவின் நடிப்பை ரசிக்கத் தொடங்கினார்,” என்று மது கூறினார்.

தற்செயலாக, பிரியங்கா இதுவரை நடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான், உண்மையில், பின்னர் தனது இருப்பை இந்தி சினிமாவிற்கும் பின்னர் ஆங்கிலப் படங்களுக்கும் மட்டுமே கட்டுப்படுத்தினார். இப்போது, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மகேஷ் பாபு படத்தின் மூலம் பிரியங்கா தென்னிந்தியாவில் மீண்டும் நடிக்க உள்ளார். SSMB 29 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் அவரது தெலுங்கு அறிமுகமாகும்.

Vijay Priyanka Chopra

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: