/indian-express-tamil/media/media_files/2024/11/02/cIOHAntH2snwpeSdisSR.jpg)
பிசாசு -2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட், ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய பணத்தில், ரூ. 2 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை திருப்பி கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இப்படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதனடிப்படையில், மத்தியஸ்தர் விசாரணையின் பேரில், ரூ. 1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜிஎஸ்டி முறையில் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரம் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
விதிக்கப்பட்ட உத்தரவை கடைபிடிக்காமல் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக பிசாசு 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதனால், பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, நவம்பர் 18-ஆம் தேதிக்குள் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.