Magarasi Serial: சினிமாவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை வீட்டில் இருந்தபடியே சீரியல் பார்க்க வைத்ததில், சன் தொலைக்காட்சிக்கு பெரும் பங்குண்டு. வெவ்வேறு களங்களில் நிறைய புது சீரியல்களையும் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளது சன் டிவி.
Advertisment
பவானி ரெட்டி, விசித்ரா, செந்தில், விஜயக்குமார் ஆகியோரின் நடிப்பில் ‘ராசாத்தி’ என்ற சீரியலை சமீபத்தில் ஒளிபரப்பத் தொடங்கியது. கிராமப் பின்னணியில் அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியலை ஓளிபரப்ப இருக்கிறது சன் டிவி.
இதில் ”கிழக்கு சீமையிலே” படத்தில் “ஆத்தங்கர மரமே” என்ற பாடலில் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட ருத்ரா நடிக்கிறார். அதோடு, ‘பிரியமானவள்’ சீரியலில் நடித்த பிரவீணாவும், புதுமுக நடிகையும் நடிக்கிறார்கள். வட இந்தியாவில் வாழும் தமிழ் நாட்டுப் பெண்ணைப் பற்றிய கதையாக இந்த சீரியல் இயக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தங்கள் வீட்டு மருமகள் என்று நினைத்து வேறு ஒரு பெண்ணை மருமகளாக வரவேற்கும் காட்சி ’மகராசி’ சீரியலின் ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது. ”நான் இந்த வீட்டோட மருமகளே இல்லை. இதை நான் இவர்களிடம் எப்படி சொல்வேன் என்று கேட்கிறார் கதையின் நாயகி.
தவிர, மகராசி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news