Advertisment

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் மரணம்; பிறந்த நாளில் தற்கொலை செய்துக் கொண்ட சோகம்

பிறந்த நாளில் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்; கேரள திரையுலகினர் அதிர்ச்சி

author-image
WebDesk
New Update
Renjusha Menon

பிறந்த நாளில் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்; கேரள திரையுலகினர் அதிர்ச்சி

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் (34) திருவனந்தபுரம் ஸ்ரீகார்யத்தில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை இறந்து கிடந்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Malayalam actor Renjusha Menon found dead at her home in Thiruvananthapuram

ஆரம்பகட்ட விசாரணையில் தற்கொலை எனத் தெரியவந்தாலும், காவல்துறை அதிகாரிகள் அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகளை தீவிரமாக விசாரித்து வருவதாக NDTV தெரிவித்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த, ரெஞ்சுஷா மேனன் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நிழலாட்டம், மகளுடே அம்மா, ஸ்திரீ மற்றும் பாலாமணி போன்ற மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்ற ரெஞ்சுஷா, சிட்டி ஆஃப் காட், மேரிக்குண்டொரு குஞ்சாடு, தலைப்பாவு, பாம்பே மார்ச் 12, ஒன் வே டிக்கெட், காரியஸ்தான் மற்றும் அத்புத த்வீ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கைரலி டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோ நட்சத்திரதீபங்கள் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் ரெஞ்சுஷா கலந்துக் கொண்டார். ரெஞ்சுஷா மேனன் கணவர், தாய், தந்தை உடன் வசித்து வந்தார்.

ரெஞ்சுஷா மேனனுக்கு இன்று பிறந்தநாள். ஷூட்டிங் ஷெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் சக ஆர்ட்டிஸ்டுகள் செய்திருந்தனர். ஆனால், அவர் காலையில் ஷூட்டிங் செட்டுக்குச் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து சக நடிகைகள் ரெஞ்சுஷா மேனனின் போனில் அழைத்திருக்கிறார்கள். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவரின் கணவர் மனோஜை போனில் தொடர்புகொண்டபோது, ​​அவர் சீரியல் ஷூட்டிங்கிற்காக வெளியே போயிருந்தார். அவரிடம் ரெஞ்சுஷா மேனன் போன் எடுக்கவில்லை என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஃபிளாட்டிலுள்ள செக்யூரிட்டிக்கு போன் செய்து ரெஞ்சுஷாவிடம் பேசும்படி கூறியிருக்கிறார். செக்யூரிட்டி ரெஞ்சுஷா மேனன் வசிக்கும் ஃபிளாட்டுக்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தியிருக்கிறார். ஆனாலும், கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து மனோஜ் கூறியதன் அடிப்படையில் ஏணி மூலம் பக்கவாட்டிலுள்ள ஜன்னல் வழியாக மேலே சென்று அவசர வாசலை திறந்து, உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அங்கு நடிகை ரெஞ்சுஷா மேனன் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிறந்தநாளில் நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக நடிகர், நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Malayalam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment