/indian-express-tamil/media/media_files/XnYbsnDj20qlHcdoH5VV.jpg)
வணங்கான் படப்பிடிப்பின்போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததால் படத்திலிருந்து விலகியதாக மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மமிதா பைஜூ யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். முதலில் அந்த படத்திற்கு இவர்தான் ஒப்பந்தமாகி இருந்தார் என்றும், படத்தில் வில்லடிச்சா மாடன் என்ற கலை இருந்தது. இதை வாசிக்க வேண்டும் என்று பாலா அவரிடம் கூறியிருக்கிறார். இதில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை என்பதால், அவர் அதிக டேக் எடுத்துள்ளார். 3 டேக் வரை எடுத்துள்ளார். மேலும் பாலா இவரை மோசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது வழக்கமாக நடக்கும் என்றுதான் என்று தெரிந்தாலும், அவரது செயல் தன்னை காயப்படுத்தியதால் படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாலா மீது இதுபோன்ற புகார் முன்பும் வந்துள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.