தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து சமந்தா தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தமிழில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் காதல் படத்தில் விஜய சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த சமந்தா தற்போது தெலுங்கில் யசோதா, சகுந்தலம் மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சமீபத்தில் வெளியான யசோதா படத்தில் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. இதனிடைய சமீபத்தில் நடிகை சமந்தா அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக தான் நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவகள் எதுவும் உண்மை இல்லை அவை அனைத்தும் வெறும் வதந்திகள் தான் என்று சமந்தா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
நேற்று (செப்டம்பர் 20) ஒரு ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்த சமந்தாவின் மேலாளர் மகேந்திரா இது தொடர்பாக கூறுகையில், சமந்தா தந்போது முழு உடல் நலமுடன் இருக்கிறார். அவருக்கு எந்த உடல்நிலை பிரச்சினையும் இல்லை அவர் உடல் நிலை சரியில்லை என்று வெளியான தகவல்கள் அனைத்து வதந்திதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சமந்தா சமூக ஊடகங்களில் ஆக்டீவாக இல்லாததால் இதுபோன்ற வதந்திகள் பரவி வருகிறது என்றும் கூறியுள்ளார். சமந்தா நடித்துள்ள யசோதா படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil