Advertisment

கமல்ஹாசனுடன் இணைய 36 வருடங்கள் ஆனது ஏன்? இயக்குனர் மணிரத்னம் விளக்கம்

நாயகன் படத்திற்கு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற 36 வருடங்கள் ஆனது குறித்து இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan Maniratnam

மணிரத்னமும், கமல்ஹாசனும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்திற்காக இணைந்துள்ளனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் – இயக்குனர் மணிரத்னம் 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளது. ஏற்கனவே நாயகன் படத்தில் இணைந்த இந்த கூட்டணி மீண்டும் இணைய இத்தனை வருடங்கள் தாமதம் ஏன் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Mani Ratnam reveals why it took him 36 years to collaborate with Kamal Haasan: ‘Unless you have at least something halfway solid…’

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் கமல்ஹாசனுடன் இணைந்த முதல் படம் நாயகன். கடந்த 1987-ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களில் ஒன்றாக உள்ளது. அதன்பிறகு மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் தனித்தனியாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர்கள் கூட்டணியில் படங்கள் வெளியாகவில்லை.

இதனிடையே சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களை இயக்கி வெளியிட்ட மணிரத்னம் அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் பிறந்த நாளான கடந்த நவம்பர் 7-ந் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் முன்னோட்ட வீடியோவுடன் வெளியான இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ள நிலையில், நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைய 36 வருடங்கள் எடுத்துக்கொண்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார். டெல்லியில் சி.என்.என். நியூஸ் 18 (CNN-News18) இந்தியன் ஆஃப் தி இயர் விருது வழங்கும் நிகழ்வில், பங்கேற்ற மணிரத்னம் பல நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.

கமல்ஹாசனுடன் இந்த ஆண்டுகள் ஏற்பட்ட இடைவெளிக்கு காரணம் முரண்பாடுகள் அல்ல. அவருக்கு தகுந்த ஸ்கிரிப்ட் அயைவில்லை என்பது தான் உண்மை. அவர் ஒரு திறமையான நடிகர். பல விஷயங்களைச் செய்த ஒருவர் உங்களிடம் இருந்தால் அவருக்கு ஸ்கிரிப்ட் செய்வது கடினமாக தான் இருக்கும். குறைந்த பட்சம் அவருக்கான கதையாக இருக்க வேண்டும். முன்பு ஒரு படத்தில் பணியாற்றியதால் மீண்டும் அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது இல்லை.  

அவருக்கு தகுந்த கதையாக இருந்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். அந்த தருணம் இப்போது வந்துள்ளது. நாங்கள் இணைந்துள்ள அடுத்த படத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maniratnam Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment