/indian-express-tamil/media/media_files/cFnk2mno9lLtXImX8N5O.jpg)
Manimegalai vs Priyanka
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த சீசனில் செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் 'குக் வித் கோமாளி' 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை இதில் இருந்து வெளியேறுவதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'சுயமரியாதைதான் முக்கியம்' என்றும் 'இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்' என்றும் வேதனையுடன் கூறியிருந்தார். .
மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாகத்தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து மணிமேகலைக்கு ஆதரவாகவும், பிரியங்காவுக்கு எதிராகவும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே குரேஷி, மணிமேகலை- பிரியங்கா இடையே நடந்தது என்ன என்பதை பேசியிருக்கிறார்.
’சம்பவம் நடந்த அன்று கூட திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் அவர் எல்லாரிடமும் நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லாருடைய இனிமையான நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரியங்காவை பற்றி பேசியபோது பிரியங்கா பதிலுக்கு திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அதில் குறுக்கிட்ட மணிமேகலை நீங்கள் இப்படி பேசக்கூடாது... ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்காவா என்று மக்கள் கேட்கிறார்கள். நீங்கள் பேசக்கூடாது என்று பிரியங்காவை பேச விடாமல் தடுத்தது மணிமேகலை தான். அதனால் மணிமேகலை தன்மானம் பற்றி அவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் கிடையாது’, என்று அந்த வீடியோவில் குரேஷி பேசி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.