ஒரு காட்சியின் தனது நடிப்பு சிறப்பாக இல்லை என்று பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவை பார்த்து இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். விது வினோத் சோப்ரா இயக்கிய 1942: எ லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேபாள நாட்டில் பிறந்தவரான மனிஷா கொய்ராலா கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், 1995-ம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆங்கிலத்தில் படிக்க : Manisha Koirala reveals Vidhu Vinod Chopra told her ‘you are very bad’ during her screen test of 1942 A Love Story, says she was ‘horrible’: ‘I requested him to…’
அதன்பிறகு முதல்வன், உயிரே, இந்தியன், ஆளவந்தான் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனிஷா தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். தற்போது நடிப்பில் இருந்து விலகியுள்ள மனிஷா கொய்ராலா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார், இதில் 1942 எ லவ் ஸ்டோரி படத்தில் படத்தின் முதல் காட்சி குறித்து பேசியுள்ளார்.
“அந்தக் காட்சியைப் பற்றி படிக்கும்போது, நான் பயங்கரமாக இருந்தேன், விது வினோத் சோப்ரா என்னிடம், ‘நீங்கள் மிகவும் மோசமாக நடித்துள்ளீர்கள்’ என்று தெளிவாகச் சொன்னார். எனவே, எனக்கு 24 மணிநேரம் அவகாசம் அளிக்குமாறு அவரிடம் கேட்டேன். அதன்பிறகு நான் நன்றாக நடிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னேன்.
இது எனது "மூன்றாவது அல்லது நான்காவது" படம் என்பதால் "நல்ல நடிப்பு அல்லது மோசமான நடிப்பு" என்பது கூட எனக்கு தெரியவில்லை "என் கையில் 3-4 தாள்கள் மட்டுமே இருந்தன, அவற்றை பல முறை படித்தேன். அதன்பிறகு மறுநாள் சென்று மீண்டும் ஸ்கிரீன் டெஸ்ட் செய்தேன், அப்போது எனது நடிப்பு சிறப்பாக வந்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளா.
இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைடாரி, ரிச்சா சத்தா, சஞ்சீதா ஷேக் மற்றும் ஷர்மின் சேகல் ஆகியோரும் நடித்துள்ளனர். இதற்கிடையில் விது வினோத் சோப்ரா கடைசியாக விக்ராந்த் மாஸ்ஸியின் 12வது ஃபெயில் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“