Advertisment

மன்சூர் அலிகான் முன்ஜாமின் மனு தள்ளுபடி: அடுத்து என்ன?

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
New Update
தடுப்பூசி வாங்க அரசுக்கு ரூ2 லட்சம்: மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு

சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

mansoor-ali-khan | trisha நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்குப் பதிலளித்த திரிஷா, “என் தொடர்பாக மன்சூர் அலிகான்  பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தனது செயலுக்கு வருத்தம் தெரிக்கவோ, மன்னிப்பு கேட்டவோ மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர் மீது  சென்னை ஆயிரம் விளக்கு காவலர்கள் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trisha Mansoor Ali Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment