New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/namitha-couple-visit-srivar.jpg)
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சாதி, மதச் சான்றிதழ் கேட்டு மரியாதை குறைவாக நடத்தினர் என நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான நமிதா குற்றச்சாட்டு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சாதி, மதச் சான்றிதழ் கேட்டு தன்னை அனுமதிக்கவில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடுமையான நடந்து கொண்டதாகவும் நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான நமிதா குற்றச்சாட்டு பரபரப்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக நமிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய இன்று காலை நானும், என் கணவரும் சென்று இருந்தோம். அப்போது பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் நீங்கள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டார். சாதி, மதச் சான்றிதழ் கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினர். நான் இந்து மதத்தை சேர்ந்தவள்.
என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது.
இந்தியாவில் எந்த கோவிலிலும் என்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.