MGR Death Anniversary : திரைத்துறையில் அறிமுகமாகி அரசியலில் புகுந்து தமிழக முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவர் அரசியலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க, அவரது படங்களும் அதில் இடம்பெற்றிருந்த பாடல்களுமே முக்கியக் காரணம் எனலாம். வாழ்க்கையின் இன்ப - துன்பம், மகிழ்ச்சி - துக்கம் உள்ளிட்ட வாழ்க்கையின் மொத்த தத்துவங்களையும் எம்.ஜி.ஆரின் பாடல்களின் உணரலாம். அப்படியான சில குறிப்பிட்ட பாடல்களை இங்கே பதிவிடுகிறோம்.
Advertisment
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசை முகம் (1965)
Advertisment
Advertisements
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளில் டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்தப் பாடல், மனிதர்களின் மன ஓட்டத்தை எடுத்துக் கூறுகிறது.
கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன் (1975)
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில், ஏ.மருதகாசியின் வரிகளில் டி.எம்.செளந்தரராஜன் பாடிய இப்பாடல், மேலோட்டமாக எதையும் நம்பி விடக்கூடாது என்பதை உணர்த்தும்.
நான் ஆணையிட்டால் - எங்க வீட்டுப் பிள்ளை (1966)
இந்தப் பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. காரணம் எம்.ஜி.ஆர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பாடல் தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் வாலியின் வரிகளுக்கு, குரல் கொடுத்திருக்கிறார் டி.எம்.செளந்தரராஜன்.
நாளை நமதே - நாளை நமதே (1975)
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் வாலி எழுதிய இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துவண்டு போனாலும், எதிர்காலம் எனும் நம்பிக்கை சுடரை ஒளிரச் செய்யும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும்.
கடவுள் ஏன் கல்லானார் - என் அண்ணன் (1970)
கே.வி.மகாதேவன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலை டி.எம்.செளந்தரராஜன் பாடியிருந்தார். கல் மனம் கொண்ட மனிதர்களால் தான் கடவுளும் கல்லாக இருக்கிறார் என இந்தப் பாடல் கூறுகிறது.
ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க (1975)
கே.வி.மகாதேவனின் இசையில், புலமைப்பித்தன் வரிகளில் ஏசுதாஸ் பாடிய இப்பாடல், மனித ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை கூறியிருக்கும். இப்படி நூற்றுக் கணக்கான எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மேம்பட்ட வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.